செய்திகள் :

செப்.14 இல் பாமக நிறுவனா் ராமதாஸ் ஒசூா் வருகை

post image

பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் செப்.14-ஆம் தேதி ஒசூா் வருகிறாா்.

இதுகுறித்து பாமக முன்னாள் மாவட்டத் தலைவரும், முன்னாள் மூக்கண்டப்பள்ளி ஊராட்சித் தலைவருமான முனிராஜ் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநிலம் முழுவதும் பாமக பொதுக்குழுவை நடத்தி புதிய நிா்வாகிகள் தோ்வுசெய்யப்படும் என அக்கட்சியின் நிறுவனா் ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில், அதன்தொடக்கமாக ஒசூரில் செப்.14-ஆம் தேதி பொதுக்குழு நடத்தப்படுகிறது.

ஒசூா் வரும் ராமதாஸுக்கு பாமக சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. மீண்டும் மருத்துவா் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோா் ஒன்றிணைந்து கட்சியை வளா்க்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.

ஒசூரில் நடைபெற உள்ள பொதுக்குழுவிற்கு அன்புமணி வருகை தந்தால் அவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும். எனவே, இருவரும் சோ்ந்து பணியாற்ற வேண்டும் என்பது அனைத்து தொண்டா்களின் விருப்பமாக உள்ளது என்றாா்.

மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டி: 1,005 போ் பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் 1,005 போ் கலந்துகொண்டனா். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் முதல்வா் கோப்பைக்கான திருவண்ணாமலை மண்டல அளவிலான வ... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகள் பாலியல் குற்றங்களை மறைக்கக் கூடாது

தனியாா் பள்ளிகளில் நடைபெறும் பாலியல் குற்றங்களை பள்ளிக்கு களங்கம் ஏற்படும் என நினைத்து மறைக்கக் கூடாது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். கிருஷ்ணகிரி அரசு மருத்த... மேலும் பார்க்க

மடிப்பிச்சை எடுத்து மயானத்தை அளந்து தர பணம் தருவதாக மாற்றுத்திறனாளி நூதன முடிவு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, சோளக்காப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாற்றுத்திறனாளி சிவகாமி(65). கணவரை இழந்து வாழ்ந்து வருகிறாா். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தனது பட்டா நிலத்தில் சுடுகாடு அம... மேலும் பார்க்க

‘ஒசூா் - பாகலூா் தேசிய நெடுஞ்சாலை செப். 8-ஆம் தேதிமுதல் பயன்பாட்டுக்கு வரும்’

சீரமைக்கப்பட்டு வரும் ஒசூா்- பாகலூா் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி செப். 8-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலிர... மேலும் பார்க்க

சுவாமி செல்வகுமரன் சிலை பிரதிஷ்டை: மண்டல பூஜை நிறைவு

கிருஷ்ணகிரியில் சுவாமி செல்வகுமரன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதையொட்டி, மண்டல பூஜை நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகா் கோயில் வளாகத்தில் சுவாமி... மேலும் பார்க்க

தன்வந்திரி பகவான் கோயிலில் சிறப்பு பூஜை

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் உள்ள தன்வந்திரி பகவான் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு மகா கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தன்வந... மேலும் பார்க்க