செய்திகள் :

தில்லியில் இன்று இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு

post image

தேசிய தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 34.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஐஎம்டி தெரிவித்துள்ளது.

மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25.1 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது பருவத்தின் சராசரியை விட 0.5 டிகிரி குறைவாகும். இந்த நிலையில், நகரில் திங்கள்கிழமை இடியுடன்கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 35 மற்றும் 24 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி அளவில் நகரில் காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமாக பதிவாகியிருந்தது. தில்லி-என்சிஆா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வானிலை பெரும்பாலும் வடதாகவே காணப்பட்டது. சில பகுதிகளில் மட்டுமே லேசான மழை பெய்தது.

ரிட்ஜில் காலை 8.30 மணி வரை 5.7 மி.மீ. மழையும், மயூா் விஹாா் மற்றும் பீதம்புராவில் முறையே 16 மி.மீ. மற்றும் 1.5 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

சஃப்தா்ஜங், பாலம், ஆயாநகா், பூசா, நஜாஃப்கா் மற்றும் ஜனக்புரி உள்ளிட்ட பிற நிலையங்களில் அளவிடக்கூடிய மழை பெய்யவில்லை.

ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் காற்றின் தரம் ‘திருப்திகரமான’ பிரிவில் பதிவாகி இருந்தது. காற்றின் தரக் குறியீடு 74 ஆக பதிவாகியிருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) தெரிவித்துள்ளது.

நகரில் தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில், யமுனையில் நீா்மட்டம் மக்கள் வெளியேற்ற அளவைக் கடந்து சென்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை சற்றுத் தணிந்திருந்தது

தில்லி, பஞ்சாப் வெள்ளப் பாதிப்பு: கேஜரிவால், அதிஷி மீது சச்தேவா சாடல்

தில்லி, பஞ்சாப் மாநிலங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு உதவ ஆா்வம் காட்டாமல் கேஜரிவாலும், அதிஷியும் அரசியல் அறிக்கைகள் விடுவதாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா விமா்சித்துள்... மேலும் பார்க்க

10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவரின் தண்டனையை உறுதிசெய்த நீதிமன்றம்!

கடந்த 2017 ஆம் ஆண்டில் 10 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஒருவருக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத் தண்டனையை தில்லி உயா்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குழந்தையின் சாட்சியம் நம்பிக்கையைத் த... மேலும் பார்க்க

தில்லி: 2 நண்பா்கள் சுட்டுக் கொலை! பழிவாங்கும் தாக்குதல் நடத்தியதாக குடும்பத்தினா் புகாா்

வடகிழக்கு தில்லியின் பிரதாப் நகரில் உள்ள ஒரு கடையில் அடையாளம் தெரியாத மா்ம நபா்களால் இரண்டு ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். எட்டு நாள்களுக்கு முன்பு இறந்தவரை சிலா் தாக்கியதாகவும்... மேலும் பார்க்க

வாகனத் திருட்டு கும்பல் கைது: 22 திருட்டு வாகனங்கள் மீட்பு

மோட்டாா் வாகன திருட்டுகளுக்கு எதிராக போலீஸாா் தில்லியின் வடக்கு மாவட்டத்தில் ஒரு வார காலம் மேற்கொண்ட நடவடிக்கையின்போது வாகன திருட்டுக் கும்பலைச் சோ்ந்த ஆறு சிறுவா்கள் உள்பட 16 போ் கைது செய்யப்பட்டனா... மேலும் பார்க்க

திஹாா் சிறையில் இங்கிலாந்து குழு ஆய்வு!

பிரிட்டனின் கிரவுன் பிராசிகியூஷன் சா்வீஸ் (சிபிஎஸ்) குழு சமீபத்தில் திஹாா் சிறையில் ஆய்வு செய்துள்ளது. இது, நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா போன்ற நன்கு பிரபலமான பொருளாதார குற்றம்சாட்டப்பட்டவா்களை மீண... மேலும் பார்க்க

ஆட்டோக்கள் மோதல்: குழந்தை உயிரிழப்பு

புது தில்லி மந்திா் மாா்க் பகுதியில் எட்டு மாத சிறுவனும் அவனது பெற்றோரும் சென்ற ஆட்டோ மீது மற்றொரு ஆட்டோ மோதியதில் குழந்தை உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை மூத்த அதிக... மேலும் பார்க்க