செய்திகள் :

ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

post image

தூத்துக்குடியைப் போல ஓசூரிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, வெளிநாடு பயணம் மாபெரும் வெற்றி பயணமாக அமைந்துள்ளது. மிக அதிக அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

ஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) காலை சென்னை திரும்பினார். சென்னை வந்திறங்கிய அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தில் ரூ.15,516 கோடி மதிப்பில் தொழில் முதலீட்டிற்கான 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் கடந்த 30-ஆம் தேதி ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றார்.

சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலில் ஜெர்மனி சென்ற அவர் பின்னர் அங்கிருந்து இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோரை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

மேலும் முதல்வருடன் தொழில், வர்த்தகம், முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா மற்றும் அதிகாரிகள் குழுவினரும் உடன் சென்றனர்.

CM Stalin has announced that an investors' conference will be held in Hosur, just like in Tuticorin

நாளை(செப்.9) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சென்னையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை(செப்.9) நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூ... மேலும் பார்க்க

சென்னை தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை, தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.சென்னை தலைமைச் செயலகத்தில் குண்டு வைத்திருப்பதாக வந்த மின்னஞ்சல் மூலமாக வந்த தகவலின... மேலும் பார்க்க

2 லட்சம் பேர் பங்கேற்ற 'புதுக்கோட்டை வாசிக்கிறது' நிகழ்ச்சி

8ஆவது புத்தகத் திருவிழாவையொட்டி, 'புதுக்கோட்டை வாசிக்கிறது' என்ற நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் சுமார் 2 லட்சம் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவிய... மேலும் பார்க்க

கருணாநிதியைவிட மோசமாக ஆட்சி நடத்தும் ஸ்டாலின்! அண்ணாமலை

முன்னாள் முதல்வர் கருணாநிதியைவிட மோசமான ஆட்சியை அவரது மகன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நடத்துவதாக முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வெளியே, புரட்சி... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து விற்பனையாகி வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நில நாள்களாகவே ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் ... மேலும் பார்க்க

ஒரத்தநாடு அருகே அண்ணன் வாங்கிய கடனுக்காக தம்பி வெட்டிப் படுகொலை

ஒரத்தநாடு அருகே அண்ணன் 15 லட்சம் கடன் வாங்கி தலை மறைவானதால் வெளிநாட்டில் இருந்து வந்த தம்பி ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வாட்டாத்தி கோட்... மேலும் பார்க்க