ஹரியாணா வெள்ளத்தில் மூழ்கிய 300 மாருதி சுசூகி கார்கள்! என்னவாகும்?
பொதுவாக மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும்போது, கார்கள் வெள்ளத்தில் மூழ்குவது சாதாரண விஷயம் என்றாலும், ஒரே இடத்தில் 300 புதிய கார்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பது சாதாரணம் அல்ல.
ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜ்ர் மாவட்டம் பஹதுர்கார் பகுதியில் கார்கள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.
மாருதி சுசூகியின் பல புதிய கார்கள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடப்பது விடியோவில் பதிவாகியிருக்கிறது.