செய்திகள் :

``அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதலமைச்சர் ஆகலாம்; ஆனால்'' - எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

post image

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம், நிலகோட்டை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி தொகுதிகளில் இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்தார் மக்களிடையே பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,

"மற்ற மாவட்டங்களில் கூறிய வாக்குறுதிகளைப் போல, திண்டுக்கலிலும் பல பொய் பிரச்சாரம் செய்து, பொய் வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறது திமுக ஆட்சி.

மக்களின் நலன் கருதி, திண்டுக்கலில் 350 கோடி ரூபாய் செலவில் அரசு மருத்துவமனையை கட்டியது நம் அதிமுக அரசு. ஆனால் இன்று ஸ்டிக்கர் ஒட்டி, பெயர்களை வைத்து அவர்கள் கட்டியது போல் திறந்து வைக்கிறது திமுக

எடப்பாடி பழனிசாமி பிரச்சார பயணம்

இந்த பகுதியை சார்ந்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இருக்கிறாரா? இல்லையா? என்பது கூட தெரியவில்லை. மக்களுக்கு சேரவேண்டிய அடிப்படை வசதிகளும், ஊராட்சிகளுக்கு சேரவேண்டிய நிதிகளும், தனது கட்சியையும் செல்வாக்கையும் வளர்த்துக்கொள்வேற்காகவே பயன்படுத்திக் கொள்கிறார்.

`அதிமுக ஆட்சியில்'

நமது ஆட்சியில்தான் நிலக்கோட்டை தொகுதியில் முதன்முறையாக அரசு மகளிர் கலைக் கல்லூரி கொண்டு வரப்பட்டது. குடிநீர் தேவைகளுக்காக காவேரி கூட்டு குடிநீர் திட்டம், வைகை அணையிலிருந்து கூட்டு குடிநீர் திட்டம், மஞ்சலாறு மற்றும் மறுகநதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது; வத்தலகுண்டு பெரிய கண்மாய் தூர்வாரப்பட்டு விவசாயத்திற்கு வழிவகை செய்தது.

இந்த ஐந்து ஆண்டுகளில் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து மட்டும் தொண்ணூறு ஆயிரம் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்துள்ளவர்கள், ஆனால் அதில் வெறும் நாற்பது ஆயிரம் குடும்பங்களுக்கு மட்டுமே ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி

`எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது'

அதிமுகவை எவ்வளவோ பேர் உடைக்கப்பார்க்கிறார்கள். முடக்கப் பார்க்கிறார்கள். அத்தனையையும் உங்கள் துணையோடு தவிடுபொடியாக்கி வருகிறோம்.

இது தொண்டர்கள் மிகுந்த கட்சி, உயிரோட்டமுள்ள கட்சி; எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது.

அதிமுகவில் தான் சாதாரண தொண்டன் கூட எம்பி ஆகலாம், எம்எல்ஏ ஆகலாம், ஏன் என்றால் முதலமைச்சர் கூட ஆகலாம். அதிமுகவின் பொதுச்செயலாளராக கூட ஆக முடியும்.

ஆனால் திமுகவில் பதவிக்கு வர வேண்டுமென்றால் அவர்களுடைய குடும்பத்தில் பிறக்க வேண்டும். கொள்ளையடிப்பதில் முதன்மை கட்சியாக திமுக உள்ளது. கண்ணுக்கு தெரியாத காற்றை வைத்தே 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தவர்கள் திமுகவினர். இவர்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் என தமிழக மக்கள் எல்லோருமே போராடி வருகின்றனர்," என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``செங்கோட்டையன் உடம்பில் மட்டும்தான் அதிமுக ரத்தம் ஓடுகிறதா?'' - தளவாய் சுந்தரம் கேள்வி

முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சொந்த சுற்றுப்பயணம். தமிழகத்திற்கு எந்த நிதியு... மேலும் பார்க்க

``மதுரை விமான நிலைய பெயர்; மக்கள் நலனை மறந்து EPS பேசுகிறார்'' - கிருஷ்ணசாமி விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என பரப்புரை பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின்: ``6 மாதத்தில் 10,000 முகாம்கள் இயலாத காரியம்'' -புறக்கணிக்க வருவாய்த்துறை முடிவு

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம்"நாளொன்றிற்கு 3000 மனுக்கள் பெறப்பட்டாலும் பெண் அலுவலர்கள் என்று கூட பாராமல் இரவு 12 மணி வரை மனுக்களை பதிவேற்றம் செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர்" என்ற... மேலும் பார்க்க

Trump: ``ட்ரம்ப் தன் தவறை உணரத் தொடங்கியுள்ளார்'' - கே.பி. ஃபேபியனின் அனுபவப் பகிர்வு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மீது விதித்த பெரும் வர்த்தக வரிகள் தொடர்பான கடுமையான நிலைப்பாட்டை கடந்த சில நாட்களாக மென்மையாக்கி வருவதாக முன்னாள் இந்திய தூதர் கே.பி. ஃபேபியன் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

Laughter therapy: சிரிப்பு சிகிச்சை உண்மையிலேயே பயன் அளிக்குமா? நிபுணர் விளக்கம்!

சிரிக்காத நாள், நம் வாழ்நாளில் வீணான ஒரு நாள் என்று பலரும் கூறிக் கேள்விப்பட்டிருப்போம். சிலர் அறையே அதிரும் அளவுக்கு சிரிப்பார்கள்; சிலரின் புன்முறுவலே அவர்களின் அதிகபட்ச சிரிப்பாக இருக்கும். ஆனால், ... மேலும் பார்க்க

பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி

துணை ஜனாதிபதி தேர்தல் வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான பயிற்சியையும், ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தை கொண்டு வந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்... மேலும் பார்க்க