செய்திகள் :

பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி

post image

பாஜகவின் வாக்குத் திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

2023 ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, போலி ‘படிவம் 7’மூலம் பல வாக்காளா்களின் பெயா் நீக்கப்பட்டதாக பதிவான வழக்கு குறித்த ஊடக செய்தியை பகிா்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்யத் தேவையான முக்கியமான தரவுகளை தேர்தல் ஆணையம் இதுவரை வழங்கவில்லை.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் இருந்து உடனடி பதில் எதுவும் இல்லை, ஆனால் தேர்தல் ஆணையம் கடந்த காலங்களில் காங்கிரஸின் இத்தகைய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆதாரமற்றவை என்று நிராகரித்துள்ளது. “தற்போது தேர்தல் ஆணையம் பாஜகவின் ‘வாக்குத் திருட்டு’துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா? பாஜகவின் அழுத்தத்துக்கு அடிபணிந்துவிட்டதா? வாக்குத் திருடர்களை தோ்தல் ஆணையம் பாதுகாக்கிறதா? ” என கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

கா்நாடகத்தில் மே 2023 சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, ஆலந்த் தொகுதியில் பெருமளவில் வாக்காளா்கள் பெயா் நீக்கப்பட்டதை காங்கிரஸ் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது. வாக்காளா் நீக்கத்துக்கான படிவம் 7-ஐ முறைகேடாக பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இது தொடர்பாக பிப்ரவரி 2023 இல் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் 5,994 மோசடி விண்ணப்பங்கள் கண்டறியப்பட்ட நிலையில், சிஐடி விசாரணைக்கு மாநில காங்கிரஸ் அரசு உத்தரவிட்டது.

இவ்வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்களில் ஒரு பகுதியை தோ்தல் ஆணையம் முன்பு வழங்கியது. ஆனால் இப்போது முக்கிய ஆவணங்களை வழங்க மறுப்பதன் மூலம் வாக்குத் திருட்டின் பின்னணியில் இருப்போரை தோ்தல் ஆணையம் திறம்பட பாதுகாக்கிறது என்று கார்கே கூறினார்.

மேலும், முக்கிய ஆதாரங்களை தோ்தல் ஆணையம் திடீரென தடுத்து வைத்துள்ளது ஏன்? யாரைப் பாதுகாக்கிறது? பாஜகவின் வாக்குத் திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா? சிஐடி விசாரணைக்கு முக்கியத் தரவுகளை பகிர மறுப்பதன் மூலம் விசாரணையை முடக்கியுள்ளதா தேர்தல் ஆணையம்? பாஜகவின் அழுத்தத்துக்கு அடிபணிந்துவிட்டதா? என கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மக்களின் வாக்குரிமை பாதுகாக்கப்பட வேண்டும்; நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று காா்கே வலியுறுத்தியுள்ளாா்.

அவரது இந்தக் குற்றச்சாட்டுக்கு தோ்தல் ஆணையம் தரப்பில் உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. காங்கிரஸின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று தோ்தல் ஆணையம் ஏற்கெனவே நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் 3 மணி நேர பயணத்தால் என்ன சாதிக்க விரும்புகிறார் மோடி? ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

Congress president Mallikarjun Kharge on Sunday accused the Election Commission of India (ECI) of having "stonewalled crucial information," which he claimed was effectively shielding those behind alleged "vote chori."

விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது: அமைச்சர் ராஜகண்ணப்பன்

யார் வேண்டுமானாலும் மாநாடு நடத்தி, கூட்டத்தை கூட்டலாம். ஆனால் அதில் பங்கேற்கும் சிறியவர்களால் ஓட்டுக் கிடைக்காது என தமிழக வனம் மற்றும் கதா்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறினாா்.சென்னையில் ஞாயிற்... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படாதது ஏன்?: நயினாா்நாகேந்திரன் கேள்வி

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படாதது ஏன்? என தமிழக பாஜக மாநிலத் தலலைவா் நயினாா்நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் ... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: திருமலை ஏழுமலையான் கோயில் கதவுகள் மூடல்

திருப்பதி: சந்திர கிரகணத்தையொட்டி திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கதவுகள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு மூடப்பட்டது. சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.50 மணி முதல் அதிகாலை 1.31... மேலும் பார்க்க

செயல்படாமல் இருக்கும் மருத்துவ உதவி மையம்: ரயில்வே பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் செயல்படாமல் இருக்கும் மருத்துவ உதவி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ரயில்வே பொது மேலாளருக்கு மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.இது... மேலும் பார்க்க

மணிப்பூர் 3 மணி நேர பயணத்தால் என்ன சாதிக்க விரும்புகிறார் மோடி? : ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

மணிப்பூர் 3 மணி நேர பயணத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி என்ன சாதிக்க விரும்புகிறார் என காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்த... மேலும் பார்க்க

ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக் கொலை!

ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.சத்தீ... மேலும் பார்க்க