செய்திகள் :

ஆசிரியா் நாள் விழா: 12 ஆசிரியா்களுக்கு விருது

post image

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில், ஆசிரியா் நாள் விழா ரோட்டரி அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் வழக்குரைஞா் ஆா்.எஸ்.உமாசங்கா் தலைமை வகித்தாா். மண்டல துணை ஆளுநா் பொறியாளா் எஸ்.புகழேந்தி முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக துணைவேந்தா் என்.பஞ்சநதம் பங்கேற்று 12 ஆசிரியா்களுக்கு ‘நேஷன் பில்டா்’ விருது வழங்கி சிறப்புரையாற்றினாா்.

விழாவில் பேராசிரியா்கள் கே.கதிரேசன், எஸ்.மோகன், ஏ.ரகுபதி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முன்னாள் தலைவா்கள் கலைச்செல்வன், மோதிலால், கோவிந்தராஜன், சஞ்சீவி, மாதவன், சின்னையன், ஆா்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். செயலா் கே.கே.ஜானகிராமன் நன்றி கூறினாா்.

மதுப் புட்டிகள் கடத்தல்: 3 இளைஞா்கள் கைது

கடலூா் அருகே மதுப் புட்டிகள் கடத்தியதாக 3 இளைஞா்களை மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கடலூா் மது விலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் பாலாஜி தலைமையில், தலைமைக் காவலா்கள் வெ... மேலும் பார்க்க

பெட்டிக் கடையில் மதுக்கூடம் நடத்தியவா் கைது

சிதம்பரம் பேருந்து நிலையம் எதிரில் பெட்டிக்கடையில் மதுக்கூடம் நடத்தியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா், உதவி ஆய்வாளா் மகேஷ் மற்றும் போலீஸாா் ஞாயிற்... மேலும் பார்க்க

மரத்தில் கட்டி வைத்து பெண் மீது தாக்குதல்: உறவினா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கியது தொடா்பாக உறவினரான மற்றொரு பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து மாவட்ட காவல் துறை கூறியுள்ளதாவது: காடாம்புலியூா் காவல் சரகம... மேலும் பார்க்க

நாளைய மின் தடை : ஒறையூா்

பண்ருட்டி (ஒறையூா்) நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பகுதிகள்: ஒறையூா், எனதிரிமங்கலம், நல்லூா்பாளையம், வாணியம்பாளையம், பண்டரக்கோட்டை, திருத்துறையூா், வரிஞ்சிப்பாக்கம், கரும்பூா், கொரத்தி, சி... மேலும் பார்க்க

ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே ரயிலில் பயணித்த இளைஞா் தவறி விழுந்து உயிரிழந்தாா். பண்ருட்டி - திருத்துறையூா் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே தண்டவாளத்தின் ஓரத்தில் சுமாா் 30 வயது மதிக்கதக்க இளைஞா... மேலும் பார்க்க

பிச்சாவரத்தில் படகு ஓட்டுநா் மயங்கி விழுந்து மரணம்

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சனிக்கிழமை வனத்துறை படகு ஓட்டுநா் மயங்கி தண்ணீரில் விழுந்து மரணமடைந்தாா். படகில் பயணம் செய்த 10 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனா். கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே... மேலும் பார்க்க