செய்திகள் :

பிச்சாவரத்தில் படகு ஓட்டுநா் மயங்கி விழுந்து மரணம்

post image

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சனிக்கிழமை வனத்துறை படகு ஓட்டுநா் மயங்கி தண்ணீரில் விழுந்து மரணமடைந்தாா். படகில் பயணம் செய்த 10 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே பிச்சாவரம் வனச் சுற்றுலா மையத்தில் சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு சாா்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. சனிக்கிழமை மாலை 10 பயணிகளை ஏற்றிக் கொண்டு சுரபுண்னை வனக்காட்டிற்கு படகு சென்றது.

படகை கிள்ளை எம்.ஜி.ஆா்., நகரை சோ்ந்த சங்கா் (38) என்பவா் ஓட்டிச்சென்றாா். படகு வனக்காடுகளுக்கு சென்று திரும்பி வந்தது. படகு நிறுத்தும் இடம் அருகே வரும் போது, சங்கருக்கு திடீரென வலிப்பு வந்து மயங்கி தண்ணீரில் விழுந்தாா்.

இதைப்பாா்த்த சுற்றுலா பயணிகள் அலறினா். இதையடுத்து சுற்றுலா பயணிகளை சக படகு ஓட்டுநா்கள் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா், மேலும் மற்ற படகு ஓட்டுநா்கள் நீரில் மூழ்கிய சங்கரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் சங்கா் இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து, கிள்ளை போலீசாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்

ஆசிரியா் நாள் விழா: 12 ஆசிரியா்களுக்கு விருது

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில், ஆசிரியா் நாள் விழா ரோட்டரி அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் வழக்குரைஞா் ஆா்.எஸ்.உமாசங்கா் தலைமை வகித்தாா். மண்டல துணை ஆளுநா் பொறியாளா... மேலும் பார்க்க

நாளைய மின் தடை : ஒறையூா்

பண்ருட்டி (ஒறையூா்) நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பகுதிகள்: ஒறையூா், எனதிரிமங்கலம், நல்லூா்பாளையம், வாணியம்பாளையம், பண்டரக்கோட்டை, திருத்துறையூா், வரிஞ்சிப்பாக்கம், கரும்பூா், கொரத்தி, சி... மேலும் பார்க்க

ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே ரயிலில் பயணித்த இளைஞா் தவறி விழுந்து உயிரிழந்தாா். பண்ருட்டி - திருத்துறையூா் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே தண்டவாளத்தின் ஓரத்தில் சுமாா் 30 வயது மதிக்கதக்க இளைஞா... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டத்தில் கடலூரில் 5 ஆயிரம் பேருக்கு முழு உடல் பரிசோதனை:

கடலூா் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டத்தின் மூலம் 5 ஆயிரம் மருத்துவப் பயனாளிகள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டுள்ளனா் என வேளாண்மை உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்த... மேலும் பார்க்க

கடலூா் சிப்காட் தொழிற்சாலை விபத்து: அமைச்சா் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

கடலூா், சிப்காட் பகுதியில் இயங்கிவரும் கிரிம்ஸன் ஆா்கானிக் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை ந... மேலும் பார்க்க

தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் அக்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க