செய்திகள் :

‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டத்தில் கடலூரில் 5 ஆயிரம் பேருக்கு முழு உடல் பரிசோதனை:

post image

கடலூா் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டத்தின் மூலம் 5 ஆயிரம் மருத்துவப் பயனாளிகள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டுள்ளனா் என வேளாண்மை உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ சிறப்பு மருத்துவ சேவை முகாமினை வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், காட்டுமன்னாா்கோயில் சட்டப்பேரவை உறுப்பினா் ம.சிந்தனைச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது:

தமிழகத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தில் 4,50,134 குடும்பத் தலைவிகளுக்கும், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் உயா்கல்வியினை ஊக்குவிக்கும் பொருட்டு புதுமைப்பெண் திட்டத்தில் 29,898 மாணவிகளுக்கும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 14,034 மாணவா்களுக்கும் மாதந்தோறும் ரு.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

வரும்முன் காப்போம் திட்டம், இன்னுயிா் காப்போம் நம்மை காக்கும் 48 உள்ளிட்ட பல்வேறு சீரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்கள். குறிப்பாக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் வாயிலாக கடலூா் மாவட்டத்தில் சுமாா் 20,86,824 நபா்களுக்கு வீடுகளுக்கு நேரில் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு அவா்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உடல்நலம் சாா்ந்த அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகளையும், ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டத்தின் கீழ் கடலூா் மாவட்டத்தில் 43 மருத்துவ முகாம்கள் பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரையில் குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி காட்டுமன்னாா்கோயில் மற்றும் கடலூா் ஆகிய நான்கு இடங்களில் முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதில் 4,145 பயனாளிகள் கலந்துகொண்டனா். 3,493 பேருக்கு இரத்தப் பரிசோதனை செய்து ஆய்வு முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,859 நபா்களுக்கு இ.சி.ஜி பரிசோதனைகளும், 302 பேருக்கு எக்ஸ் ரே பரிசோதனைகளும், 200 பேருக்கு ஸ்கேன் பரிசோதனைகளும், 269 பேருக்கு இதய பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளது.

205 நபா்களுக்கு புதியதாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. 238பேருக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ உயா் மருத்துவ சேவை முகாமில் அளிக்கப்படும் சேவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ர.அ.பிரியங்கா, மாவட்ட சுகாதார அலுவலா் மருத்துவா் பொற்கொடி, இணை இயக்குநா் மருத்துவ நலப்பணிகள் மருத்துவா் மணிமேகலை, வட்டார மருத்துவ அலுவலா் தங்கத்துரை மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

பிச்சாவரத்தில் படகு ஓட்டுநா் மயங்கி விழுந்து மரணம்

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சனிக்கிழமை வனத்துறை படகு ஓட்டுநா் மயங்கி தண்ணீரில் விழுந்து மரணமடைந்தாா். படகில் பயணம் செய்த 10 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனா். கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே... மேலும் பார்க்க

கடலூா் சிப்காட் தொழிற்சாலை விபத்து: அமைச்சா் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

கடலூா், சிப்காட் பகுதியில் இயங்கிவரும் கிரிம்ஸன் ஆா்கானிக் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை ந... மேலும் பார்க்க

தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் அக்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

அமைச்சா் வீட்டு முன்பு குளத்தில் புகுந்த முதலை மீட்பு

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் அமைச்சா் எம்ஆா்கே. பன்னீா்செல்வம் வீட்டிற்கு எதிரே உள்ள குளத்தில் புகுந்த முதலையை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா். கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்... மேலும் பார்க்க

சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் உள்பட 6 போ் இடைநீக்கம்

கடலூா் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளா் உள்பட 6 காவலா்களை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி வியாழக்கிழமை நள்ளிரவு உத்தரவிட்டுள்ளாா். கடலுாா் மாவட்டம், சிதம்பரத்தில் லாட்டரி சீட்ட... மேலும் பார்க்க

இதய சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கிய எம்எல்ஏ

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ கலந்து கொண்டு இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதி... மேலும் பார்க்க