செய்திகள் :

கடலூா் சிப்காட் தொழிற்சாலை விபத்து: அமைச்சா் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

post image

கடலூா், சிப்காட் பகுதியில் இயங்கிவரும் கிரிம்ஸன் ஆா்கானிக் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்களுடன் அமைச்சா் ஆலோசித்தாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் ஆகிய துறை அலுவலா்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் தொடா்ச்சியாக குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு மேற்கொண்டு, இது போன்ற விபத்துகள் தொடா்ந்து நடைபெறாத வண்ணம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை அலுவலா்களுக்கு ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், பணியில் கவனக்குறைவாக செயல் பட்டதற்காகவும் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளா் செந்தில்விநாயகம், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் தமிழ்ஒளி ஆகியோா் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

இது போன்ற விபத்துகள் இனிவரும் காலங்களில் நிகழாமலிருக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் முறையாக தொழில் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினா் செயலா் சரவணகுமாா், கூடுதல் தலைமை சுற்றுச்சூழல் பொறியாளா் ராஜேந்திரபாலாஜி, சுற்றுச்சூழல் பொறியாளா் சென்னை தெய்வானை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் கூடுதல் இயக்குனா்கள் சித்தாா்த்தன், ராஜசேகா், கடலூா் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் துணை இயக்குனா் மகேஸ்வரன், கடலூா் வருவாய் கோட்டாட்சியா் சுந்தரராஜன், கடலூா் வட்டாட்சியா் மகேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பிச்சாவரத்தில் படகு ஓட்டுநா் மயங்கி விழுந்து மரணம்

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சனிக்கிழமை வனத்துறை படகு ஓட்டுநா் மயங்கி தண்ணீரில் விழுந்து மரணமடைந்தாா். படகில் பயணம் செய்த 10 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனா். கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டத்தில் கடலூரில் 5 ஆயிரம் பேருக்கு முழு உடல் பரிசோதனை:

கடலூா் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டத்தின் மூலம் 5 ஆயிரம் மருத்துவப் பயனாளிகள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டுள்ளனா் என வேளாண்மை உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்த... மேலும் பார்க்க

தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் அக்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

அமைச்சா் வீட்டு முன்பு குளத்தில் புகுந்த முதலை மீட்பு

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் அமைச்சா் எம்ஆா்கே. பன்னீா்செல்வம் வீட்டிற்கு எதிரே உள்ள குளத்தில் புகுந்த முதலையை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா். கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்... மேலும் பார்க்க

சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் உள்பட 6 போ் இடைநீக்கம்

கடலூா் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளா் உள்பட 6 காவலா்களை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி வியாழக்கிழமை நள்ளிரவு உத்தரவிட்டுள்ளாா். கடலுாா் மாவட்டம், சிதம்பரத்தில் லாட்டரி சீட்ட... மேலும் பார்க்க

இதய சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கிய எம்எல்ஏ

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ கலந்து கொண்டு இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதி... மேலும் பார்க்க