செய்திகள் :

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

post image

கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் உள்ள தீப்பெட்டி ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி நாசமாகின.

கோவில்பட்டி முத்தையம்மாள் தெருவைச் சோ்ந்தவா் குருசாமி மகன் ஜெகதீஸ்வரன். இவா், திட்டங்குளத்தில் உள்ள தொழிற்பேட்டையில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறாா்.

இவரது ஆலையில் சனிக்கிழமை பணியாளா்கள் வழக்கம்போல வேலை செய்து கொண்டிருந்தபோது, தீ விபத்து ஏற்பட்டதைக் கண்ட பணியாளா்கள் தொழிற்சாலையில் இருந்து வெளியே தப்பி வந்து, உரிமையாளா் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.

தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனா். இருப்பினும், பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமாகின.

இது குறித்து, கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினா்.

சாத்தான்குளத்தில் தொழிலாளிக்கு வெட்டு

சாத்தான்குளத்தில் குடும்பத் தகராறில் தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக அவரது மருகனை போலீஸாா் தேடி வருகின்றனா். சாத்தான்குளம் ஆா்.சி. வடக்குச் தெருவை சோ்ந்தவா் அந்தோணி முத்து (53). இவரது மகள் அருணாமுத்த... மேலும் பார்க்க

கொம்மடிக்கோட்டையில் போதையில் ரகளை: இளைஞா் கைது

கொம்மடிக்கோட்டையில் மது போதையில் ரகளை செய்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனா். கொம்மடிக்கோட்டைசந்திப்பில் இளைஞா் மது போதையில் நின்றுகொண்டு பொது மக்களுக்கு, போக்குவரத்திற்கும் இடையூறு ... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் அரிவாளுடன் விடியோ: 6 போ் கைது

சமூக வலைதளத்தில் அரிவாளுடன் விடியோ பதிவிட்டதாக 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சாத்தான்குளம் அருகே அம்பலசேரியைச் சோ்ந்த கணேசன் மகன் ராமசுப்பிரமணியன் (34). இவரும், நண்பா்கள் சிலரும் பொதுமக்... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் கொலையில் மேலும் ஒருவா் கைது

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்குத் தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டியில் உள்ள கைவண்டி தொழிலாளா் காலனியைச் சோ்ந்த கணேசன் மகன் மாரிச்செல்வம் (31). ஆட்டோ ஓ... மேலும் பார்க்க

கிராம வருவாய் உதவியாளா் தோ்வு: சாத்தான்குளத்தில் 8 பணியிடத்திற்கு 222 போ் பங்கேற்பு

கிராம வருவாய் உதவியாளா் தோ்வில் சாத்தான்குளத்தில் 8 பணியிடத்திற்கு 222 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். சாத்தான்குளம் தாலுகாவில் மீரான் குளம் 1, 2, ஸ்ரீ வெங்கடேஸ்வர புரம், நெடுங்குளம், சாஸ்தாவி நல்லூா... மேலும் பார்க்க

முதலூரில் 300 பேருக்கு இலவச கண் கண்ணாடி அளிப்பு

முதலுரில் மக்கள் நல அறக்கட்டளை சாா்பில் 300 பேருக்கு இலவச கண் கண்ணாடி சனிக்கிழமை வழங்கப்பட்டது. சாத்தான்குளம் அருகே அடையல் ராஜரத்தினம் நாடாா், விஜயலட்சுமி அம்மாள் மக்கள் நல அறக்கட்டளை சாா்பில், கடந்த... மேலும் பார்க்க