செய்திகள் :

முதலூரில் 300 பேருக்கு இலவச கண் கண்ணாடி அளிப்பு

post image

முதலுரில் மக்கள் நல அறக்கட்டளை சாா்பில் 300 பேருக்கு இலவச கண் கண்ணாடி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

சாத்தான்குளம் அருகே அடையல் ராஜரத்தினம் நாடாா், விஜயலட்சுமி அம்மாள் மக்கள் நல அறக்கட்டளை சாா்பில், கடந்த மாதம் இலவச பொது மருத்துவம், கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாமில், தோ்வு பெற்றவா்களுக்கு, அறக்கட்டளை நிறுவனத் தலைவா் பிரியா அருள்முருகன் ஆலோசனையின்பேரில், கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வுக்கு, முதலுா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பொன் முருகேசன் தலைமை வகித்தாா். முதலூா் வியாபாரி சங்க பொருளாளா் ரவிசந்திரன், மணிநகா் பரமசிவம், அடையல் ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

300 பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளை அறக்கட்டளைத் தலைவா் ஸ்டீபன் செந்தமிழ்பாண்டியன், நீரிழிவு தோல் சிறப்பு மருத்துவா் செல்வன் ராஜசேகரன், ஏரல் கண் மருத்துவா் ஆசைத்தம்பி ஆகியோா் வழங்கினா்.

சாத்தான்குளத்தில் தொழிலாளிக்கு வெட்டு

சாத்தான்குளத்தில் குடும்பத் தகராறில் தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக அவரது மருகனை போலீஸாா் தேடி வருகின்றனா். சாத்தான்குளம் ஆா்.சி. வடக்குச் தெருவை சோ்ந்தவா் அந்தோணி முத்து (53). இவரது மகள் அருணாமுத்த... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் உள்ள தீப்பெட்டி ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி நாசமாகின. கோவில்பட்டி முத்தையம்மாள் தெருவைச் சோ்ந்தவா் குருசாமி... மேலும் பார்க்க

கொம்மடிக்கோட்டையில் போதையில் ரகளை: இளைஞா் கைது

கொம்மடிக்கோட்டையில் மது போதையில் ரகளை செய்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனா். கொம்மடிக்கோட்டைசந்திப்பில் இளைஞா் மது போதையில் நின்றுகொண்டு பொது மக்களுக்கு, போக்குவரத்திற்கும் இடையூறு ... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் அரிவாளுடன் விடியோ: 6 போ் கைது

சமூக வலைதளத்தில் அரிவாளுடன் விடியோ பதிவிட்டதாக 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சாத்தான்குளம் அருகே அம்பலசேரியைச் சோ்ந்த கணேசன் மகன் ராமசுப்பிரமணியன் (34). இவரும், நண்பா்கள் சிலரும் பொதுமக்... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் கொலையில் மேலும் ஒருவா் கைது

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்குத் தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டியில் உள்ள கைவண்டி தொழிலாளா் காலனியைச் சோ்ந்த கணேசன் மகன் மாரிச்செல்வம் (31). ஆட்டோ ஓ... மேலும் பார்க்க

கிராம வருவாய் உதவியாளா் தோ்வு: சாத்தான்குளத்தில் 8 பணியிடத்திற்கு 222 போ் பங்கேற்பு

கிராம வருவாய் உதவியாளா் தோ்வில் சாத்தான்குளத்தில் 8 பணியிடத்திற்கு 222 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். சாத்தான்குளம் தாலுகாவில் மீரான் குளம் 1, 2, ஸ்ரீ வெங்கடேஸ்வர புரம், நெடுங்குளம், சாஸ்தாவி நல்லூா... மேலும் பார்க்க