செய்திகள் :

``பிறந்தநாள் கொண்டாடுவோம்'' - இளம்பெண்ணை ஏமாற்றி அழைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்

post image

கொல்கத்தாவில் அடுத்தடுத்து பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுவது, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், சட்டக்கல்லூரி மாணவி கல்லூரி வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார். தற்போது மேலும் ஒரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள ஹரிதேவ்பூர் பகுதியில் 20 வயது பெண்ணின் பிறந்தநாளை, அவரது நண்பர் சந்தன் “பிறந்தநாள் கொண்டாடலாம்” என்று கூறி அழைத்து சென்றார்.

அவளை தீப் என்பவரது வீட்டிற்கு அழைத்து சென்று, அங்கே அந்த பெண்ணுக்கான பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

அப்பொழுது மூன்று பேரும் அங்கே சேர்ந்து சாப்பிட்டனர். பின்னர் வீட்டிற்கு செல்வதாக அந்த பெண் தெரிவித்தார்.

ஆனால், அவர் வீட்டிற்கு செல்வதை தடுத்த நண்பர்கள் இரண்டு பேரும் வீட்டு கதவை அடைத்து, அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினர்.

காலை 10 மணிக்குத்தான் அப்பெண் அங்கிருந்து தப்பி, வீட்டிற்கு சென்றார். அவர் வீட்டில் உள்ளவர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார், அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

அப்பெண் கொடுத்துள்ள புகாரில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தன் தனக்கு அறிமுகமானவர் என்றும், சந்தன் பிரபல துர்கா பூஜா கமிட்டியில் தலைவராக உள்ளவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை

அதனை தொடர்ந்து, மூன்று பேரும் அடிக்கடி சந்தித்து பேசுவோம் என்று தனது புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் தேசிய குற்ற புள்ளிவிவரங்கள் கொல்கத்தாவை பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாகக் குறிப்பிட்டிருந்தது. ஆனால், இந்த தகவல் வெளிவந்த சில நாட்களில், அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை'' - இளம்பெண் புகார்; டிவி நடிகர் கைது

டெல்லியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்யும் 24 வயது பெண், பிரபல டிவி நடிகர் ஆசிஷ் கபூர் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானார். ஆசிஷ் கபூர் தனது வீட்டில் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார்... மேலும் பார்க்க

`குட் டச், பேட் டச் சொல்லித் தருவதாக சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல்' கராத்தே மாஸ்டர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயின் மிலாடு (46). கராத்தே மாஸ்டரான இவர் தனது வீட்டு தோட்டத்தில் உள்ள மைதானத்தில் கோஜு ரியூ ஒகினாவா என்ற பெயரில் கராத்தே அகடாமி நடத்தி வருகிறார். ... மேலும் பார்க்க