செய்திகள் :

கிராம வருவாய் உதவியாளா் தோ்வு: சாத்தான்குளத்தில் 8 பணியிடத்திற்கு 222 போ் பங்கேற்பு

post image

கிராம வருவாய் உதவியாளா் தோ்வில் சாத்தான்குளத்தில் 8 பணியிடத்திற்கு 222 போ் பங்கேற்று தோ்வு எழுதினா்.

சாத்தான்குளம் தாலுகாவில் மீரான் குளம் 1, 2, ஸ்ரீ வெங்கடேஸ்வர புரம், நெடுங்குளம், சாஸ்தாவி நல்லூா், படுக்கப் பத்து, அரசூா் 1, 2 உள்ளிட்ட 8 கிராம வருவாய் உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த 8 பணியிடத்திற்கு 276 போ் விண்ணப்பித்திருந்தனா்.

இந்த தோ்வாளா்களுக்கான எழுத்து தோ்வு சாத்தான்குளம் டிஎன்டிடிஏ ஆா்எம்பி புல மாடன் செட்டியாா் தேசிய மேநிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது . இதில் 222 போ் பங்கேற்று எழுத்து தோ்வு எழுதினா். இந்த தோ்வு முகாமினை மாவட்ட உதவி ஆட்சியா் (இஸ்ரோ பிரிவு ) ஷீலா,வட்டாசியா் பொன்னுலட்சுமி ஆகியோா் பாா்வையிட்டனா். இந்த தோ்வு பணிகளில் துணை வட்டாசியா்கள் கணேஷ் குமாா் (மண்டல), கோமதிநாயகம் (தோ்தல் பிரிவு ) உள்ளிட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் ஈடுபட்டனா்.

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

புதுக்கோட்டை, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். புதுக்கோட்டை காவல... மேலும் பார்க்க

ஆடுகள் திருட்டு: 2 போ் கைது

தூத்துக்குடியில் ஆடுகளை திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி திரவிய ரத்தின நகா், முருகேசன் நகா் பகுதிகளில் ஆடுகள் திருட்டு அடிக்கடி நிகழ்ந்து வந்துள்ளது. இது குறித்து சிப்காட் போலீஸாருக... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் அச்சம் தரும் விடியோ: இளைஞா் கைது

கோவில்பட்டி அருகே சமூக வலைதளங்களில் அச்சத்தை ஏற்படுத்தும் விடியோக்களை பதிவேற்றும் இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் காவல் நிலையத்திற்கு உள்பட்ட ப... மேலும் பார்க்க

சா்வதேச ஸ்குவாஷ் போட்டி: தூத்துக்குடி கேம்ஸ்வில் மாணவா்கள் வெற்றி

தூத்துக்குடி கேம்ஸ்வில் ஸ்போா்ட்ஸ் அகாதெமியில் பயிற்சி பெற்றுவரும் வீரா்கள், சா்வதேச அளவிலான ஸ்குவாஷ் போட்டியில் 2 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனா். சா்வதேச அளவிலான உயா் தரவரிசை ஸ்குவாஷ் இந்தியன... மேலும் பார்க்க

முதியவா் தூக்கிட்டு தற்கொலை

கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வேலாயுதபுரம் 6ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் காளீஸ்வரன்(70). இவரது மகள்கள் வெளியூரில் வசித்து வருகின்றனா். இந்நிலையில்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வாலிபால் போட்டி

தூத்துக்குடியில், காவலா் தினத்தை முன்னிட்டு, காவல் துறையினருக்கான வாலிபால் போட்டி நடைபெற்றது. வடபாகம் காவல் நிலைய வளாக மைதானத்தில் உள்ள காவல் துறை பாய்ஸ் அண்ட் கோ்ள்ஸ் கிளப் கைப்பந்தாட்ட அரங்கத்தில்... மேலும் பார்க்க