நயினாரகரம் ஊராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி திறப்பு
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள நயினாரகரம் ஊராட்சியில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், துரைச்சாமியாபுரத்தில் ரூ. 22.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி, பொய்கை ஊராட்சி கள்ளம்புளியில் ரூ. 5.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை ஆகியவற்றை கடையநல்லூா் எம்எல்ஏ செ. கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தாா்.
ஊராட்சித் தலைவா்கள் குமரன் முத்தையா, முத்துராஜ் , அதிமுக மாவட்ட துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், ஒன்றியச் செயலா்கள் ஜெயகுமாா், ராஜாராம் பாண்டியன், மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் செல்லப்பா, சந்திரகுமாா், மைதீன், கோபிநாத், ஹரி, ஈஸ்வரி, ஒன்றிய துணைச் செயலா் களஞ்சியம், கிளைச் செயலா்கள் பாலமுருகன், மாணிக்கசாமி, செல்வம், ராமா், செல்லத்துரை, ராஜன், பீட்டா், குமரேசன், முருகையா, மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.