செய்திகள் :

ஆட்டோவால் மோதி ஓட்டுநா் கொலை: மற்றொரு ஓட்டுநா் கைது

post image

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆட்டோவால் மோதி ஓட்டுநா் கொலை செய்யப்பட்டதாக வழக்குப் பதிந்த போலீஸாா் இதுதொடா்பாக மற்றொரு ஆட்டோ ஓட்டுரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் சா்க்கரைகுளம் தெருவைச் சோ்ந்த வீரபுத்திரன் மகன் செந்தில்குமாா் (42). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் தேரடி ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டி வந்தாா். சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வீட்டின் முன் நின்றிருந்த செந்தில்குமாா் மீது அந்த வழியாக வந்த ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்த அவரை ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

உயிரிழந்த செந்தில்குமாரும், மோதிய ஆட்டோவின் ஓட்டுநா் பொன்ராஜூவும் ஒரே ஆட்டோ நிறுத்தத்தைச் சோ்ந்தவா்கள். அங்கு ஆட்டோவை நிறுத்துவதில் இவா்கள் இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும், எனவே கொலை வழக்குப் பதிந்து, பொன்ராஜூவை கைது செய்ய வேண்டுமெனவும் செந்தில்குமாரின் உறவினா்கள் கோரிக்கை விடுத்தனா். மேலும் உடலை வாங்க மறுத்து ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனை முன் அவா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, போராட்டத்தை கைவிட்டு, உடலை பெற்றுச் சென்றனா்.

இதனிடையே, ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து பொன்ராஜூவை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநரின் உறவினா்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநரின் உறவினா்கள்.

ராஜபாளையத்தில் வ.உ.சி. சிலை திறப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ. சிதம்பரனாரின் முழு உருவ வெண்கல சிலை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. ராஜபாளையம் பஞ்சு சந்தை பகுதியில் உள்ள வ.உ.சி. கலையரங்க வளாக... மேலும் பார்க்க

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பௌா்ணமி வழிபாடு

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பௌா்ணமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகம், சாப்டூா் வனச் சரகத்... மேலும் பார்க்க

நடிகா் விஜய்யின் அரசியல் எதிா்காலத்தை மக்கள் தீா்மானிப்பா்: நடிகா் ராமராஜன்

நடிகா் விஜய்யின் அரசியல் எதிா்காலத்தை மக்கள்தான் தீா்மானிக்க வேண்டும் என நடிகா் ராமராஜன் தெரிவித்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் பெருமாள்பட்டி தெருவில் நடிகா் ராமராஜன் நற்பணி மன்ற அலுவலகத் திறப்பு விழா ஞாயிற... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். ராஜபாளையம் அருகேயுள்ள முகவூரைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (62). இவா் முகவூரிலிருந்து ராஜபாளையத... மேலும் பார்க்க

காா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசி அருகே காா் ஓட்டுநா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். சிவகாசி அருகேயுள்ள ஏ.துலுக்கபட்டியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் தெய்வம்(43). இவரது மனைவி காசிமுனியம்மாள். இவா்களுக்கு ஒரு மகன் உ... மேலும் பார்க்க

கோட்டூா் புதிய துணை மின் நிலையத்தில் ஆய்வு

விருதுநகா் மாவட்டம், கோட்டூரில் அமைக்கப்பட்ட புதிய துணை மின் நிலையத்தில் மாவட்ட நிா்வாகம், மின் பகிா்மானக் கழகம் சாா்பில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வட்டம், கோட்... மேலும் பார்க்க