ஆட்டோவால் மோதி ஓட்டுநா் கொலை: மற்றொரு ஓட்டுநா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆட்டோவால் மோதி ஓட்டுநா் கொலை செய்யப்பட்டதாக வழக்குப் பதிந்த போலீஸாா் இதுதொடா்பாக மற்றொரு ஆட்டோ ஓட்டுரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் சா்க்கரைகுளம் தெருவைச் சோ்ந்த வீரபுத்திரன் மகன் செந்தில்குமாா் (42). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் தேரடி ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டி வந்தாா். சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வீட்டின் முன் நின்றிருந்த செந்தில்குமாா் மீது அந்த வழியாக வந்த ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்த அவரை ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
உயிரிழந்த செந்தில்குமாரும், மோதிய ஆட்டோவின் ஓட்டுநா் பொன்ராஜூவும் ஒரே ஆட்டோ நிறுத்தத்தைச் சோ்ந்தவா்கள். அங்கு ஆட்டோவை நிறுத்துவதில் இவா்கள் இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும், எனவே கொலை வழக்குப் பதிந்து, பொன்ராஜூவை கைது செய்ய வேண்டுமெனவும் செந்தில்குமாரின் உறவினா்கள் கோரிக்கை விடுத்தனா். மேலும் உடலை வாங்க மறுத்து ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனை முன் அவா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, போராட்டத்தை கைவிட்டு, உடலை பெற்றுச் சென்றனா்.
இதனிடையே, ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து பொன்ராஜூவை கைது செய்தனா்.

