செய்திகள் :

``என் ரசிகர் மன்றத்தில் இருந்தால் பெண் கொடுக்க போட்டி போடுவார்கள்'' - ராமராஜன் சொல்லும் காரணம்

post image

ராமராஜன் தலைமை நற்பணி மன்றம்

திரைப்பட நடிகரும் முன்னாள் அதிமுக திருச்செந்தூர் மக்களவை உறுப்பினருமான ராமராஜன், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ராமராஜன் தலைமை நற்பணி மன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "ஸ்ரீவில்லிபுத்தூர் நகரத்தைப் பொறுத்தவரை, மற்ற நடிகர்களுக்கான நற்பணி மன்றங்களைப் போல அல்லாமல், இங்கு மிகவும் கட்டுப்பாடுடன் செயல்பட்டு வருகிறது.

ராமராஜன்

உறுப்பினர் சேர்க்கை கட்டணம்

இங்குள்ள தனது நற்பணி மன்றத்தில் தற்போது உறுப்பினராக சேர விரும்பினால், 60 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும்.

அதற்குப் பிறகு, பணம் கட்டியவர்கள் ஒழுக்கம் குறித்த விசாரணை செய்யப்பட்டு, அதன் பின்னர் நற்பணி மன்ற தலைவர் தாமரைக்கனி அவர்களின் ஆலோசனையின் பேரில் மன்றத்தில் இணைக்கப்படுவர்.

தற்போது உறுப்பினர் சேர்க்கை கட்டணம் 60 ஆயிரம் ரூபாயாக உள்ளது. வரும் அக்டோபர் 8 முதல் அது 70 ஆயிரம் ரூபாயாக மாற்றப்பட உள்ளது.

மேலும், இந்த ஊரைப் பொறுத்தவரை, ராமராஜன் நற்பணி மன்றத்தில் ஒருவர் ரசிகராக இருந்தாலே, பெண்களை போட்டி மூலம் வரவழைக்கும் நடவடிக்கைகள் நடைபெறும் என்று கூறினார்.

எம்.ஜி.ஆரின் புகழ்

தற்போதைய தமிழக அரசியல் களம் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்த அவர், “நான் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் தலைமை ஏற்று, அ.தி.மு.க.-வில் சிறப்பாக செயல்பட்டு வந்தேன்” என தெரிவித்துள்ளார்.

ராமராஜன்

“தற்போது நடைபெறும் சூழ்நிலைகள் எல்லாம், வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்பே மாற வாய்ப்புள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை எடப்பாடி பழனிச்சாமி கட்சியை விட்டு நீக்கியது குறித்த கேள்விக்கு, பதிலளித்த அவர்,
“இதில் எனக்கு உடன்பாடு இல்லை. இவை அனைத்தும் எம்.ஜி.ஆரின் புகழை கெடுக்குமெனில், அதனைத் தான் உயிரைக் கொடுத்து காப்பாற்றுவேன்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`ஆவினில் வேலை' பண மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி. ராஜேந்திரபாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக சாத்தூரைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி ரவீந்த... மேலும் பார்க்க

20 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜ் தாக்கரே வீட்டுக்கு சென்ற உத்தவ்; `இனி எடுபடாது' -பட்னாவிஸ் விமர்சனம்

மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு, பல்வேறு அரசியல் மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த 2005-ம் ஆண்டு உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட அதிகாரப்போட்டியின் காரணமாக, சிவசேனாவில் இருந்து விலகிய... மேலும் பார்க்க

தோல்வியில் முடிந்த தாக்கரே சகோதரர்களின் முதல் கூட்டணி தேர்தல்: முதல்வரைச் சந்தித்த ராஜ் தாக்கரே!

மகாராஷ்டிராவில் கடந்த 2023ம் ஆண்டு சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி பா.ஜ.கவோடு கூட்டணி அமைத்துள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தொடர்ந்து காங்கிரஸ் கூட்ட... மேலும் பார்க்க

துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை பா.ஜ.க தேர்வு செய்ய காரணம் என்ன?

துணை ஜனாதிபதி தேர்தல் துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அப்பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று கூடிய பா.ஜ.க தலைமை கூட்டத்தில், துணை ஜனாதிப... மேலும் பார்க்க

``சென்னை மாநகராட்சி முழுதும் திமுக போலி வாக்காளர்களால் மட்டுமே வெற்றி பெறுகிறது'' -எடப்பாடி பழனிசாமி

வாக்காளர் பட்டியல் திருத்தம்‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளில் மக்களை சந்தித்தார். ... மேலும் பார்க்க