செய்திகள் :

பள்ளி, மருத்துவமனைகளை விட மசூதிகள் அதிகம்! எங்கு தெரியுமா?

post image

பாகிஸ்தான் நாட்டில் பள்ளி மற்றும் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை விட மசூதிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக பொருளாதாரக் கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

அதாவது, பள்ளிகளின் எண்ணிக்கையை விட மசூதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக உள்ளதாகவும், மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் இல்லை எனவும் தரவுகள் கூறுகின்றன.

1947ஆம் ஆண்டு சுதந்திரத்துக்குப் பிறகு பாகிஸ்தான் நாட்டில் முதல்முறையாக பொருளாதாரக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் கிடைத்த தரவுகளின்படி,

பாகிஸ்தானில் மொத்தம் 6 லட்சம் மசூதிகள் மற்றும் 36 ஆயிரம் மதபோதனைக் கூடங்கள் உள்ளன. எனினும், 2,69,000 பள்ளிகள் மற்றும் 1,19,000 மருத்துவமனைகள் மட்டுமே உள்ளன. 250 மில்லியன் (25 கோடி) மக்கள்தொகை கொண்ட நாட்டில், இந்த எண்ணிக்கையிலான மருத்துவமனை போதுமானதில்லை எனக் கூறப்படுகிறது.

கல்வி பெறுவதில் உள்ள தலையீடு, மருத்துவ சேவைகளைப் பெறுவதில் உள்ள சிக்கல் போன்றவை நிர்வாகத்தில் உள்ள சமநிலையற்ற தன்மையையும் நிர்வாகப் பிரச்னைகளையும் எதிரொலிக்கின்றன. இவை நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றன.

உயர்கல்வி பெறுவதிலும் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. புள்ளிவிவரக் கணக்கெடுப்பின்படி, 11,568 கல்லூரிகள், 214 பல்கலைக் கழகங்கள் மட்டுமே உள்ளன. இவை மனிதவள மேம்பாட்டிற்கான மோசமான நிலையக் குறிக்கிறது.

மேலும், பாகிஸ்தானில் தற்போதுள்ள மருத்துவமனைகளின் எண்ணிக்கை 2,083 மக்களுக்கு ஒரு மருத்துவமனை என்ற விகிதத்திலேயே உள்ளன.

பாகிஸ்தானில் உள்ள மக்களுக்கு முறையான வேலைவாய்ப்பும் உருவாக்கப்படவில்லை. புள்ளிவிரவங்களின்படி, 10.9 மில்லியன் (1.9 கோடி) மக்கள் கால்நடை வளர்ப்பு, தையல் கலை, உணவு பதப்படுத்துதல், ஆன்லைன் சேவை போன்றவற்றை செய்து வருகின்றனர்.

இதில், 5.6 மில்லியன் மக்கள் கால்நடை வளர்ப்பு, 419,000 பேர் தையல் கலை, 93,000 பேர் ஆன்லைன் சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது முறையான வேலைவாய்ப்பின்மையையே குறிக்கும் வகையில் உள்ளது.

கணக்கெடுப்பின்படி, 25 மில்லியன் (2.5 கோடி) மக்கள் 7.143 மில்லியன் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இதில், 2,50,000 மட்டுமே பாகிஸ்தான் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவையாக உள்ளன.

இதையும் படிக்க |நள்ளிரவில் முழுமையாகத் தெரியும் சந்திர கிரகணம்! அடுத்து 2028-இல்தான்!

Pakistan has more mosques than schools and hospitals

உடல் நலனைப் பேணுவதில் முன்னோடி பிரதமர்: மிலிந்த் சோமன்

உடல் நலனைப் பேணுவதில் தனக்கு முன்னோடியாக பிரதமர் நரேந்திர மோடி இருப்பதாக நடிகர் மிலிந்த் சோமன் தெரிவித்துள்ளார். தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் மிலிந்த் சோமன் கலந்துகொண்ட... மேலும் பார்க்க

நள்ளிரவில் முழுமையாகத் தெரியும் சந்திர கிரகணம்! அடுத்து 2028-இல்தான்!

இந்தியாவில் 2022-ஆம் ஆண்டுக்குப் பின் வானில் முழுமையாகத் தெரியும் முழு சந்திர கிரகணம் இன்று(செப். 7) நள்ளிரவில் நிகழ்கிறது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.01 மணிக்கு முழு சந்திர கிரகணமாக மாறி, திங்கள்கிழ... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: நாளை மாதிரி வாக்குப்பதிவு - என்ன நடக்கும்?

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்.9-இல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக திங்கள்கிழமை(செப். 8) மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர். மாதிரி... மேலும் பார்க்க

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நலமாக உள்ளார்: மருத்துவமனை அறிக்கை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நலமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் முதல்வர் சோர்வு மற்றும் குறைந்த இதயத் துடிப்பு காரணமாக மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

கேரளத்தில் மனைவியின் கள்ளக் காதலனால் கணவன் கொலை !

கேரளத்தில் மனைவியின் கள்ளக் காதலனால் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், புதூரில் ஷியாம் சுந்தரின் மனைவியும், அவரது குழந்தையும் கடந்த நான்கு ஆண்டுகளாக தனேஷுடன் வசி... மேலும் பார்க்க

பிரதமரின் மணிப்பூர் விசிட் 3 மணி நேரம்தானா?

இனமோதல் ஏற்பட்ட மணிப்பூருக்குச் செல்லவிருக்கும் பிரதமர் மோடியின் பயணத் திட்டம் பற்றி பாஜக வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.மணிப்பூரில் கடந்த 2023-இல் இனமோதல் ஏற்பட்டு பெரும் கலவரம் மூண்ட நிலை... மேலும் பார்க்க