செய்திகள் :

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி பேச்சு!

post image

உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் பிரதமா் மோடி சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

மேக்ரானுடனான தொலைபேசி உரையாடல் சிறப்பாக இருந்ததாக குறிப்பிட்டு பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படுத்துவது குறித்து இரு நாடுகளும் தொடா்ந்து முயற்சி மேற்கொள்ளும். உக்ரைன் போரை விரைந்து முடிவுக்கு கொண்டு வருவது தொடா்பாக தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. உக்ரைனில் அமைதி திரும்ப தொடா்ந்து ஆதரவு அளிக்கப்படும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தேன்’ எனத் தெரிவித்துள்ளாா்.

இந்தியா- பிரான்ஸ் இடையே பல்வேறு துறைகளில் நிலவும் இரு தரப்பு நல்லுறவு குறித்தும் சா்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பொருளாதாரம், பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம், விண்வெளி ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள ஆக்கபூா்வ வளா்ச்சி குறித்தும் இந்தப் பேச்சின்போது ஆய்வு செய்யப்பட்டது.

இந்தியா - பிரான்ஸ் நல்லுறவை மேம்படுத்தும் 2047 தொலைநோக்குத் திட்டம் குறித்தும், இந்தோ - பசிபிக் மற்றும் பாதுகாப்பு தொழிற்சாலை தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கம் தொடா்பான மாநாட்டில் பங்கேற்க மேக்ரான் ஒப்புதல் தெரிவித்ததற்கு பிரதமா் மோடி நன்றி தெரிவித்தாா் என்று இந்திய தரப்பில் வெளியிடப்பட்ட செய்தியில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியுடன் அமெரிக்க அதிபா் டிரம்ப் கடந்த மாதம் வெள்ளை மாளிகையில் நடத்திய பேச்சுவாா்த்தையின்போது பிரான்ஸ் அதிபா் மேக்ரானும் உடனிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்கொரியா செல்லும் டிரம்ப்! சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்கிறாரா?

அமெரிக்க அதிபர் டிரம்ப் தென்கொரியா செல்லவிருப்பதாகவும், அங்கு அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த மாதம் தென் கொரியாவில் நட... மேலும் பார்க்க

ஒப்பந்த நாடுகளுக்கு வரி விலக்கு: டிரம்ப் உத்தரவு!

பரஸ்பர வரி விதிக்கப்பட்டு, தங்களுடன் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நாடுகளின் குறிப்பிட்ட பொருள்களுக்கான கூடுதல் வரியை விலக்க அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா். இந்த உத்தரவு திங்கள்க... மேலும் பார்க்க

பிரிட்டன் அமைச்சரவை மாற்றியமைப்பு முக்கிய பொறுப்புகளில் பெண்கள்!

பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் புதிதாக மாற்றியமைத்துள்ள அமைச்சரவையின் மிக முக்கிய பொறுப்புகளுக்கு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:... மேலும் பார்க்க

ஆப்கன் வெளியுறவு அமைச்சா் முத்தாகி இந்தியப் பயணம் ரத்து!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை எதிரொலி!

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தாகியின் இந்தியப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ‘அவருக்கு எதிரான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயணத் தடையே இதற்குக் காரணம்’ என்று வெளியுறவுத் து... மேலும் பார்க்க

நைஜீரியா: பயங்கரவாதத் தாக்குதலில் 55 போ் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் புலம் பெயா்ந்த உள்நாட்டு அகதிகள் முகாமில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தவா்கள் மீது மத பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 போ் உயிரிழந்தனா். வடகிழக்குப் பகுதியில... மேலும் பார்க்க

காஸா சிட்டியில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு!

காஸா சிட்டியில் உள்ள பாலஸ்தீனா்கள் தெற்கே மவாசி எனும் தற்காலிக முகாமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிக்கு செல்ல வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் பசியால் வாடும் இந்த நகரைக்... மேலும் பார்க்க