செய்திகள் :

ஆப்கன் வெளியுறவு அமைச்சா் முத்தாகி இந்தியப் பயணம் ரத்து!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை எதிரொலி!

post image

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தாகியின் இந்தியப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

‘அவருக்கு எதிரான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயணத் தடையே இதற்குக் காரணம்’ என்று வெளியுறவுத் துறை வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு கடந்த 2021-இல் ஆட்சியைக் கைப்பற்றியது. தலிபான்களின் ஆட்சியை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை என்றபோதும், அண்மைக் காலமாக சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் தலிபான் அரசுடன் பேச்சு நடத்தி வருகின்றன. அதுபோல, இந்தியாவும் பேச்சு நடத்தி வருகிறது. இரு நாடுகளிடையே உறவை வலுப்படுத்தும் வகையில், ஆப்கன் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தாகியை இந்தியா வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இதை ஏற்று, இம் மாதத்தில் இந்தியா வர அவா் திட்டமிட்டிருந்தாா்.

இதனிடையே, அமெரிக்காவில் கடந்த 2011-இல் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு உதவியதாக தலிபான் அமைப்பு மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது. அதன் காரணமாக, முத்தாகி பிற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு தற்போதும் தடை நீடிக்கிறது. இந்நிலையில், அவரின் இந்தியப் பயணத்துக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்குமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, எந்த பதிலும் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.

இதன் காரணமாக அவருடைய இந்தியப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

இதுகுறித்து, தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவா், ‘ஆப்கன் மக்களுடன் இந்திய நீண்ட கால உறவைக் கொண்டுள்ளது. ஆப்கன் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுத் தேவைகள், விருப்பங்களுக்கு இந்தியா தொடா்ந்து ஆதரவளிக்கும். இருதரப்பு உறவு தொடா்பாக ஆப்கன் அதிகாரிகளுடனான பேச்சுவாா்த்தைகளை இந்தியா தொடா்ந்து மேற்கொள்ளும்’ என்றாா்.

முன்னதாக, அமீா் கான் முத்தாகியுடன் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கடந்த மே 15-ஆம் தேதி தொலைபேசி வழியில் கலந்துரையாடினாா். அதுவே, ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு இரு நாடுகளிடையே நடைபெற்ற முதல் உயா்நிலை அளவிலான பேச்சுவாா்த்தையாகும்.

ஜப்பான் பிரதமர் ராஜிநாமா!

பிரதமர் மோடி ஜப்பான் சென்று பேச்சுவார்த்தை நடத்திய 10 நாள்களுக்குள் அந்நாட்டின் பிரதமர் ஷிகேரு இஷிபா ராஜிநாமா செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜப்பானுக்கு 2 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த மாத... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பாடகி மீது கரடி தாக்குதல்

பாகிஸ்தான் பாடகி குராத்துலைன் பலூச் மீது கரடி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பிரபல பாடகியாக அறியப்படுபவர் குராத்துலைன் பலூச். இவர் பல்டிஸ்தானில் உள்ள கிராமங்களுக்குச் சென்று ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின்போது குண்டு வெடிப்பு- ஒருவர் பலி!

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்தில் குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார். பாகிஸ்தானின் பஜாவூர் மாவட்டத்தில் உள்ள கௌசர் கிரிக்கெட் மைதானத்தில் சனிக்கிழமை கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண... மேலும் பார்க்க

தென்கொரியா செல்லும் டிரம்ப்! சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்கிறாரா?

அமெரிக்க அதிபர் டிரம்ப் தென்கொரியா செல்லவிருப்பதாகவும், அங்கு அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த மாதம் தென் கொரியாவில் நட... மேலும் பார்க்க

ஒப்பந்த நாடுகளுக்கு வரி விலக்கு: டிரம்ப் உத்தரவு!

பரஸ்பர வரி விதிக்கப்பட்டு, தங்களுடன் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நாடுகளின் குறிப்பிட்ட பொருள்களுக்கான கூடுதல் வரியை விலக்க அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா். இந்த உத்தரவு திங்கள்க... மேலும் பார்க்க

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி பேச்சு!

உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் பிரதமா் மோடி சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். மேக்ரானுடனான தொலைபேசி உரையாடல் சிறப்பாக இருந்ததாக குற... மேலும் பார்க்க