செய்திகள் :

``ஆமை புகுந்த வீடும், பா.ஜ.க நுழைந்த மாநிலமும் உருப்படாது'' - ப.சிதம்பரம் காட்டம்

post image

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள கடியாப்பட்டியில் காங்கிரஸ் கட்சி புதிய அலுவலக கட்டட திறப்பு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு:

"தமிழ்நாட்டில் இதுவரை வாக்குத்திருட்டு நடக்கவில்லை. ஆனால் பீகாரில் வாக்குத்திருட்டு நடந்துள்ளது. கர்நாடகத்தில் சில தொகுதிகளில், மகாராஷ்டிராவில் பல தொகுதிகளில் வாக்குத்திருட்டு நடந்துள்ளது.

தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் வாக்குத்திருட்டு நடத்த முடியாது என்று நான் டெல்லியில் உத்தரவாதம் வழங்கியுள்ளேன். காரணம், கேரளத்தில் இடதுசாரி அணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி வலிமையான கூட்டணிகள் உள்ளன.

அதேபோல், தமிழ்நாட்டிலும் வாக்குத்திருட்டு நடக்காது. ஏனென்றால், ஒரு கிராமத்தில் வெளிநபர் நுழைந்தாலும், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றாலும், உள்ளூர்வாசிகள் கேள்வி எழுப்புவார்கள். ஆனால் பீகாரில் அப்படி இல்லை. அதனால் அங்கு வாக்குத்திருட்டு நடக்கிறது.

pa.chidambaram

தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி வலிமையாக உள்ளது. அதேபோல், எதிர்க்கட்சியையும் குறைத்து மதிப்பிட முடியாது. அ.தி.மு.க கூட்டணியும் வலிமையாக உள்ளது. வாக்குத்திருட்டு விவகாரத்தில் நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலும் வாக்குத்திருட்டு முயற்சி நடக்கலாம், ஏனெனில் பா.ஜ.க நுழைந்துள்ளது. பா.ஜ.க-வோடு கூட்டணியில் உள்ள அ.தி.மு.க வாக்குத்திருட்டை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் பா.ஜ.க-விற்கு மட்டுமே வாக்குத் திருட்டு வழி திறந்திருக்கும்.

"ஆமை புகுந்த வீடும், அமீனா நுழைந்த வீடும் உருப்படாது" என்ற பழமொழி போல, பா.ஜ.க நுழைந்த மாநிலமும் உருப்படாது. இதனால், இன்னும் ஏழு–எட்டு மாதத்தில் தேர்தல் வரவுள்ளது. வாக்காளர் பட்டியல் வரும் போது நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்."

ப. சிதம்பரம்

"நமக்கு அ.தி.மு.க அணியும் போட்டி அணிதான். அதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. நாமும் அ.தி.மு.க அணியினரும் ஒரே கருத்தில் உடன்பட்டு இருக்கின்றோம். பா.ஜ.க-வை அவர்களிடமிருந்து கழித்து பார்த்தால் இருவருக்கும் வாக்குத்திருட்டு நடக்கக்கூடாது என்பதுதான்.

வாக்காளர் பட்டியல் வரும்போது யார் பெயரை நுழைக்கிறார்கள், யார் பெயரை நீக்குகிறார்கள் என்பதை விழிப்புடன் நாம் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் வாக்குத்திருட்டு நடக்காது என்ற முழு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நம்பிக்கை இருந்தால் மட்டும் போதாது. அந்த நம்பிக்கைக்கு ஆதரவாக நம்முடைய உழைப்பும் இருக்க வேண்டும்.

தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க போன்ற கூட்டணி எல்லா இடங்களிலும் தொடரும். அதில் ஒன்றும் சந்தேகம் வேண்டாம். இது இடதுசாரி முற்போக்கு கூட்டணி; இடதுசாரி முற்போக்கு கட்சிகள் தொடர்ந்து இருக்கின்றனர். வெற்றி அல்லது தோல்வி என்பது வேறு விஷயம். நாம் தொடர்ந்து இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு பாடுபடுவோம்," என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி

துணை ஜனாதிபதி தேர்தல் வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான பயிற்சியையும், ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தை கொண்டு வந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்... மேலும் பார்க்க

``எடப்பாடி தலைமையை ஏற்க முடியாது; அது தற்கொலைக்கு சமம்'' – தொடர்ந்து விமர்சிக்கும் டிடிவி தினகரன்

"ஓபிஎஸ்-சும் நானும் கூட்டணியில் இருந்து வெளியேறக் காரணம் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுதான்" என்று மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டம... மேலும் பார்க்க

Doctor Vikatan: மூட்டுவலி உள்ளவர்கள் வாக்கிங் போகலாமா, உடற்பயிற்சி செய்யலாமா?

Doctor Vikatan:மூட்டுவலி (Arthritis) உள்ளவர்கள் உடற்பயிற்சிகள் செய்யலாமா, எந்த வகையான உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். வாக்கிங் செய்யலாமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர்... மேலும் பார்க்க

பதவி பறிப்பு மசோதா: ``INDIA கூட்டணியில் அதிக குற்றப்பின்னணி இருக்கும் கட்சி திமுக'' - ADR அறிக்கை

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி அரசு, நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் பதவி நீக்க மசோதாவை அறிமுகப்படுத்தியது.அதில், “ஓர் அமைச்சர் பதவியில் இருக்கும்போது, ஐந்து ... மேலும் பார்க்க

ஆரோக்கியம் தருவது சைவமா; அசைவமா? - மருத்துவர் சொல்வதென்ன?

சாப்பாடு என்றாலே நம் எல்லோருடைய மனதிற்குள்ளும் அப்படியொரு சந்தோஷம் வரும். அது பசிக்கும்போது வீட்டில் அம்மா தன் கையால் பரிமாறும் சாம்பார் சாதமாக இருந்தாலும் சரி, நண்பர்களுடன் சுடச்சுட பிரியாணி சாப்பிடு... மேலும் பார்க்க

``அதிமுக-வில் செங்கோட்டையனுக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது”-வைத்திலிங்கம்!

ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "அதிமுகவில் இருக்கிற எல்லோரும் கட்சி ஒன்றிணைந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். இல்லை என்றால் முடியாது ... மேலும் பார்க்க