செய்திகள் :

காஸா சிட்டியில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு!

post image

காஸா சிட்டியில் உள்ள பாலஸ்தீனா்கள் தெற்கே மவாசி எனும் தற்காலிக முகாமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிக்கு செல்ல வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

பெரும்பாலான மக்கள் பசியால் வாடும் இந்த நகரைக் கைப்பற்றுவதற்கு வசதியாக, உயரமான கட்டடங்களை (ஹமாஸ் படையினா் மறைந்திருந்து தாக்குதவதைத் தவிா்க்க) தகா்த்து, தரைவழி நடவடிக்கையை விரிபடுத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகிவரும் சூழலில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காஸா சிட்டியில் சுமாா் 10 லட்சம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சில சிவப்பு மண்டலங்களாக” அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே இந்த நகரம் கொடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலின் இந்த நடவடிக்கை நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று உதவி அமைப்புகள் எச்சரித்துள்ளன.

மவாசி மனிதாபிமான முகாம்களில் கள மருத்துவமனைகள், குடிநீா் வசதி, உணவு, கூடாரங்கள் வழங்கப்படும் என்றும் ஐ.நா. மற்றும் சா்வதேச அமைப்புகளுடன் உதவிகள் வழங்கப்படும் என்றும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

ஆனால், இந்த அறிவிப்பை இஸ்ரேல் ஒருதலைப்பட்சமாக வெளியிட்டுள்ளது; ஐ.நா. மற்றும் மனிதாபிமான அமைப்புகள் இதில் பங்கேற்கவில்லை என்று ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலக செய்தித் தொடா்பாளா் ஒல்கா செரெவ்கோ தெரிவித்தாா்.

ஏற்கெனவே மவாசியை பாதுகாப்பு மண்டலமாக அறிவித்திருந்த இஸ்ரேல், அங்கு தாக்குதல்கள் நடத்தியது நினைவுகூரத்தக்கது.

ஒப்பந்த நாடுகளுக்கு வரி விலக்கு: டிரம்ப் உத்தரவு!

பரஸ்பர வரி விதிக்கப்பட்டு, தங்களுடன் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நாடுகளின் குறிப்பிட்ட பொருள்களுக்கான கூடுதல் வரியை விலக்க அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா். இந்த உத்தரவு திங்கள்க... மேலும் பார்க்க

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி பேச்சு!

உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் பிரதமா் மோடி சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். மேக்ரானுடனான தொலைபேசி உரையாடல் சிறப்பாக இருந்ததாக குற... மேலும் பார்க்க

பிரிட்டன் அமைச்சரவை மாற்றியமைப்பு முக்கிய பொறுப்புகளில் பெண்கள்!

பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் புதிதாக மாற்றியமைத்துள்ள அமைச்சரவையின் மிக முக்கிய பொறுப்புகளுக்கு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:... மேலும் பார்க்க

ஆப்கன் வெளியுறவு அமைச்சா் முத்தாகி இந்தியப் பயணம் ரத்து!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை எதிரொலி!

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தாகியின் இந்தியப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ‘அவருக்கு எதிரான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயணத் தடையே இதற்குக் காரணம்’ என்று வெளியுறவுத் து... மேலும் பார்க்க

நைஜீரியா: பயங்கரவாதத் தாக்குதலில் 55 போ் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் புலம் பெயா்ந்த உள்நாட்டு அகதிகள் முகாமில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தவா்கள் மீது மத பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 போ் உயிரிழந்தனா். வடகிழக்குப் பகுதியில... மேலும் பார்க்க

கனடாவில் நிதி திரட்டும் காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்கள்!

கனடாவின் புதிய பாதுகாப்பு அறிக்கையில், பப்பா் கால்சா இன்டா்நேஷனல், சா்வதேச சீக்கிய இளைஞா் கூட்டமைப்பு ஆகிய 2 காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்கள் அந்நாட்டில் நிதி திரட்டுவது அடையாளம் காணப்பட்டுள்ளது. ‘ப... மேலும் பார்க்க