செய்திகள் :

ஆர்.எஸ்.எஸ். கொடியுடன் ஆபரேஷன் சிந்தூர் அத்தப்பூ கோலம்..! கேரள ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீது வழக்குப் பதிவு!

post image

கேரளத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வாசகம் மற்றும் ஆர்எஸ்எஸ் கொடியுடன் அத்தப்பூ கோலம் போடப்பட்ட சம்பவத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற பண்டிகையான ஓணம் பண்டிகை நேற்றுமுன் தினம் நிறைவடைந்தது. இது கேரளம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாப்பட்டது. இந்தப் பண்டிகையையொட்டி பூக்காளால் ஆன அத்தப்பூ போடுவது வழக்கம்.

இந்த நிலையில், கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் முத்துப்பில்லக்கில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வாசகம் மற்றும் ஆர்எஸ்எஸ் கொடியுடன் அத்தப்பூ கோலம் போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கோலம் போடப்பட்டதைத் தொடர்ந்து கோயிலுக்குச் சென்ற காவல் துறை அதிகாரிகள், அதனை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டனர். இதனால், காவல் துறை அதிகாரிகளுக்கும், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 27 பேர் மீது பிஎன்எஸ் பிரிவுகள் 223(அரசு உத்தரவை மீறுதல்), 192 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல்) மற்றும் 3(5) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கோயில் அதிகாரிகள் கூறிய நிலையில், இது “ஆபரேஷன் சிந்தூரை கௌரவிப்பதற்காக போடப்பட்டதாக” கேரள பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

கேரள காவல்துறையை கடுமையாக சாடிய கேரள பாஜக தலைவர்ராஜீவ் சந்திரசேகர், “கொல்லம் மாவட்டத்தில் 27 ஆர்எஸ்எஸ் ஆர்வலர்கள் மீது வழக்குப் பதியப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 

கேரள மாநிலம் ஜமாத்-இ-இஸ்லாமியால் ஆளப்படுகிறதா அல்லது பாகிஸ்தானின் ஆட்சியின் கீழ் உள்ளதா?. எஃப்ஐஆர் உடனடியாக திரும்பப் பெறப்படாவிட்டால் நீதிமன்றத்தை அணுக வேண்டிவரும்” என்று அவர் எச்சரித்தார்.

இதுகுறித்து கோயில் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இது போன்ற பிரச்சினை வருவது முதல்முறை கிடையாது. கோயில் திருவிழா நாள்களில் இதுபோன்ற கொடிகளின் வடிவில் கோலமிடுவது வழக்கம். இதனால், 2023 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.

கேரளத்தில் கடந்த சில மாதங்களாகவே ஆளும் இடதுசாரி முன்னணியினருக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கும் இடையேயான மோதல்கள் விஸ்வரூபம் எடுக்கத் துவங்கியுள்ளன.

கேரள ஆளுநர் மாளிகையில், உலகச் சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயன்படுத்தப்படும் பாரத மாதாவின் உருவப் படத்தைக் காட்சிப்படுத்தியது மற்றும் மலப்புரத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவிகளை ஆர்எஸ்எஸ் பாடலை பாட வைத்தது என பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இதுவும் புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

Row over Onam ‘pookalam’ with Operation Sindoor inscription at Kerala temple; 27 RSS activists booked

இதையும் படிக்க : எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்! - முதல்வர் ஸ்டாலின்

பிரதமரின் மணிப்பூர் விசிட் 3 மணி நேரம்தானா?

இனமோதல் ஏற்பட்ட மணிப்பூருக்குச் செல்லவிருக்கும் பிரதமர் மோடியின் பயணத் திட்டம் பற்றி பாஜக வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.மணிப்பூரில் கடந்த 2023-இல் இனமோதல் ஏற்பட்டு பெரும் கலவரம் மூண்ட நிலை... மேலும் பார்க்க

மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி, 5 பேர் காயம்

மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது அறுந்து கிடந்த மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியானார். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது சகினாகா பகுதியில் ஞா... மேலும் பார்க்க

கொல்கத்தா: இளம் பெண்ணை வீட்டிலிருந்து கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்!

கொல்கத்தாவில் இளம் பெண்ணை வீட்டிலிருந்து கடத்தி நண்பர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், ஹரிதேவ்பூர் பகுதியின் தெற்குப் பகுதியில் 20 வயது இள... மேலும் பார்க்க

ம.பி.யில் போலீசாருடன் சென்ற கார் ஆற்றில் விழுந்ததில் ஒருவர் சடலம் மீட்பு

மத்தியப் பிரதேசத்தில் போலீசாருடன் சென்ற கார் ஆற்றில் விழுந்ததில் ஒருவரின் சடம் மீட்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் மழைக்குப் பிறகு மூன்று போலீசாரை ஏற்றிச் சென்ற கார் சனிக்கிழ... மேலும் பார்க்க

செப். 9-ல் பஞ்சாப் செல்கிறார் பிரதமர் மோடி!

பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குர்தாஸ்பூர் மாவட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் செப். 9 ஆம் தேதி செல்கிறார்.தொடர்ந்து பிரதமர் மோடி, நிவாரணப் பணிகளையும் கண்காணிக்க இருப்ப... மேலும் பார்க்க

குஜராத்: மலைக் கோயிலில் சரக்கு ரோப் காா் அறுந்து விழுந்தது! 6 போ் உயிரிழப்பு

குஜராத் மலைக் கோயிலில் சரக்குகளை எடுத்துச் செல்லும் ரோப் காா் அறுந்து விழுந்ததில் 6 போ் உயிரிழந்தனா். பஞ்சமஹல் மாவட்டத்தின் பாவாகட் மலையில் பிரசித்தி பெற்ற மகாகாளி கோயில் அமைந்துள்ளது. 800 மீட்டா் உய... மேலும் பார்க்க