செய்திகள் :

லபுஷேன் ஹாட்ரிக்: கோப்பையை வென்றது ரெட்லேண்ட்!

post image

மார்னஸ் லபுஷேனின் அசத்தலான பந்துவீச்சினால் அவரது ரெட்லேண்ட் அணி இறுதிப் போட்டியில் வென்றது.

கேஎஃப்சி டி20 மேக்ஸ் தொடரில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லேன்ட் கிரிக்கெட் கிளப் நடத்தும் டி20 போட்டிகள் 2022 முதல் நடைபெற்று வருகின்றன.

இந்தத் தொடரின் 2025 சீசனில் இறுதிப் போட்டியில் வேல்லி அணியும் ரெட்லேண்ட் அணியும் மோதின.

முதலில் பேட் செய்த ரெட்லேன்ட் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜிம்மி பியர்சன் 102 ரன்கள் குவித்தார்.

அடுத்து விளையாடிய வேல்லி அணி 150 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இந்த அணியில் மேக்ஸ் பிரயண்ட் 76 ரன்கள் எடுத்தது.

இந்தப் போட்டியில் மார்னஸ் லபுஷேன் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். மேலும், 3 கேட்ச்களைப் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.

பேட்டரான மார்னஸ் லபுஷேன் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தொடரில் ஒரு போட்டியில் லபுஷேன் சதம் அடித்து அசத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Marnus Labuschagne's brilliant bowling helped his Redlands team win the final.

3 ஆண்டுக்குப் பின் லாகூரில் முதல் டெஸ்ட்! பாகிஸ்தான் செல்லும் தென்னாப்பிரிக்க அணி!

நடப்பு சாம்பியனான தென்னாப்பிரிக்க அணி, 3 ஆண்டுகளுக்குப் பின்னர் லாகூரில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவிருக்கிறது.உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரில் முதல் முறையாக ஆஸ்திரேலியா... மேலும் பார்க்க

2-ஆவது டி20: ஜிம்பாப்வேயிடம் இலங்கை மோசமான தோல்வி!

இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டி20 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அபார வெற்றி பெற்றது.ஜிம்பாப்வேயின் ஹராரேயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 17.4 ஓவர்களில் அனைத்து... மேலும் பார்க்க

2-வது டி20: ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு; 80 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (செப்டம... மேலும் பார்க்க

இந்திய அணியில் போட்டியை வென்று கொடுப்பவர் ரிஷப் பந்த் மட்டுமே; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

இந்திய அணியில் போட்டியை வென்று கொடுப்பவர் ரிஷப் பந்த் மட்டுமே என இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ரோலண்ட் புட்ச்சர் கூறியுள்ளார்.இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்... மேலும் பார்க்க

பாகிஸ்தானிடம் தோற்றால் பொறுமையை இழந்துவிடுவேன்: வீரேந்திர சேவாக்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தால் தனது பொறுமையை இழந்துவிடுவேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் முன்னாள் வீரரும், அதிரடி தொடக்க ஆட்டக்கா... மேலும் பார்க்க

ஆஸி. டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் தங்களுக்குள் இரண்டு அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள... மேலும் பார்க்க