செய்திகள் :

இந்திய அணியில் போட்டியை வென்று கொடுப்பவர் ரிஷப் பந்த் மட்டுமே; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

post image

இந்திய அணியில் போட்டியை வென்று கொடுப்பவர் ரிஷப் பந்த் மட்டுமே என இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ரோலண்ட் புட்ச்சர் கூறியுள்ளார்.

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர். இந்த ஆண்டு இங்கிலாந்து தொடருக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தனர்.

இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் இந்திய அணி மிஸ் செய்யும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ரோலண்ட் புட்ச்சர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை மிஸ் செய்யப் போகிறது என நினைக்கிறேன். ஏனெனில், அவர்கள் இருவருமே போட்டியை வென்று கொடுப்பவர்கள். அவர்கள் இருவரும் ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவர்கள். தற்போது இந்திய அணி நன்றாக இருக்கிறது. ஆனால், ரோஹித் மற்றும் கோலி இருந்தபோது அணி இன்னும் வலிமையாக இருந்தது. இவர்கள் இருவருக்கும் மாற்று வீரர்களாக அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் நன்றாக விளையாடுகிறார்கள். ஆனால், அவர்கள் தொடர்ச்சியாக நன்றாக விளையாடி ரன்கள் குவிக்க வேண்டும்.

மூத்த வீரர்கள் இல்லாமல் அணி மெதுவாக மாற்றம் அடைந்து வருவதால், அடுத்த இரண்டு ஆண்டுகள் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான காலக்கட்டமாகும். போட்டியை வென்று கொடுக்கும் பேட்டர்களை இந்திய அணி கண்டுபிடிக்க வேண்டும். தற்போதுள்ள இந்திய அணியில் ரிஷப் பந்த் மட்டுமே போட்டியை வென்று கொடுப்பவராக இருக்கிறார். அதனால், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அணியில் இல்லாது பெரிய இழப்பாகும் என்றார்.

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதையடுத்து, இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டதும், அவரது தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

Former England wicketkeeper Roland Butcher has said that Rishabh Pant is the only one who can win matches for the Indian team.

இதையும் படிக்க: பாகிஸ்தானிடம் தோற்றால் பொறுமையை இழந்துவிடுவேன்: வீரேந்திர சேவாக்

2-வது டி20: ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு; 80 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (செப்டம... மேலும் பார்க்க

பாகிஸ்தானிடம் தோற்றால் பொறுமையை இழந்துவிடுவேன்: வீரேந்திர சேவாக்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தால் தனது பொறுமையை இழந்துவிடுவேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் முன்னாள் வீரரும், அதிரடி தொடக்க ஆட்டக்கா... மேலும் பார்க்க

ஆஸி. டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் தங்களுக்குள் இரண்டு அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள... மேலும் பார்க்க

ஆசிய கோப்பைக்கான புதிய சிகையலங்காரம்..! வைரலாகும் ஹார்திக் புகைப்படங்கள்!

ஆசிய கோப்பைக்கான ஹார்திக் பாண்டியாவின் புதிய சிகையலங்காரம் வைரலாகி வருகிறது. ஆசிய கோப்பை டி20 போட்டிகள் வரும் செப்.9ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை டி20 போட... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆறுதல் வெற்றியை தடுத்த ஆப்கன் பந்துவீச்சாளர்!

முத்தரப்பு டி20 தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையேயா... மேலும் பார்க்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகம் சாதிக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயார்: மிட்செல் ஸ்டார்க்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகம் சாதிப்பதற்காக எந்த அளவுக்கு கடினமாகவும் உழைக்கத் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலிய அணியின் பிரதான பந்துவீச்சாள... மேலும் பார்க்க