செய்திகள் :

உக்ரைன் - ரஷியா சண்டைக்கு விரைவில் முடிவு: பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு!

post image

உக்ரைன் - ரஷியா சண்டைக்கு விரைவில் முடிவு எட்டப்படும் என்று பிரான்ஸ் அதிபருடனான தொலைபேசி உரையாடலுக்குப் பின், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் மோடி தமது எக்ஸ் தளப் பக்கத்தில் இன்று(செப். 6) பதிவிட்டுள்ளதாவது: “பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மேம்பாடு குறித்து நாங்கள் இருவரும் ஆராய்ந்தோம். மேலும், சர்வதேச, பிராந்திய பிரச்சினைகளைப் பற்றியும் விவாதித்தோம்.

அதிலும் குறிப்பக, உக்ரைனில் நீடிக்கும் சண்டைக்கு விரைவில் முடிவு எட்ட மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் குறித்து கருத்து பரிமாற்றம் நடத்தப்பட்டது.

இந்தியா- பிரான்ஸ் இடையேயான பங்களிப்பானது, உலகளாவிய அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு முக்கிய பங்காற்றும்” என்றார்.

PM Narendra Modi speaks to French President Macron - Exchanged views on international and regional issues, including efforts for bringing an early end to the conflict in Ukraine.

பின்லேடனுக்காக அனுப்பப்பட்ட அதே குழுதான் வடகொரியாவுக்கும்? 2019-ல் அமெரிக்காவின் செயல்!

2019 ஆம் ஆண்டில் வடகொரியாவில் உளவு தொடர்பாக அமெரிக்கா முயற்சி செய்ததாக அமெரிக்க செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.2019 ஆம் ஆண்டில் வடகொரியாவில் உளவுபார்ப்பு சாதனத்தைப் பொருத்த அமெரிக்காவின் சீல் குழு 6 (US... மேலும் பார்க்க

காஸா மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை! கைப்பற்றும் நடவடிக்கையா?

காஸா மக்களை தெற்கு நோக்கிச் செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.காஸாவில் இஸ்ரேல் படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும்நிலையில், 15 மாடிகள்கொண்ட கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தியது. ஹமா... மேலும் பார்க்க

பிரிட்டனின் முதல் முஸ்லிம் பெண் உள்துறைச் செயலர்! யார் இந்த ஷபானா மஹ்மூத்?

பிரிட்டன் நாட்டின் புதிய உள்துறைச் செயலாளராக ஷபானா மஹ்மூத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிரிட்டன் நாட்டின் முதல் முஸ்லிம் பெண் உள்துறைச் செயலாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். பிரிட்டனில் தொழில... மேலும் பார்க்க

ஏஐ வருகை! 2030-க்குள் 90% வேலை காலி - ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால், வரும் காலங்களில் 90 சதவிகிதத்தினர் வேலையிழப்பைச் சந்திக்க நேரிடும்.பல்வேறு நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் அதிகரிப்பால், 2030 ஆம் ஆண்டுக்குள் 90 சதவிகித தொ... மேலும் பார்க்க

ஞாயிறு இரவு நிகழும் சந்திரகிரகணம்: சிவப்பு நிலா பற்றிய முழு விவரம்

செப்டம்பர் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு முழு சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது. இதில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தெரிய வரும் என்றும், சந்திரகிரணத்தின்போது நிலவு ரத்தச் சிவப்பாகக் காட்சி தரும் என்று... மேலும் பார்க்க

காஸா போர்: ஹமாஸுடன் தீவிர பேச்சுவார்த்தை! - டிரம்ப் தகவல்

காஸாவில் ஹமாஸ் அமைப்பினருடன் தீவிர பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தகவல் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான ப... மேலும் பார்க்க