செய்திகள் :

தெலங்கானா கெமிக்கல் தொழிற்சாலையில் ரூ.12,000 கோடி போதைபொருள் பறிமுதல்; மும்பை போலீஸார் அதிரடி!

post image

மும்பையில் ஒரு வகை போதைப்பொருள் அதிக அளவில் சப்ளை செய்யப்படுகிறது. மும்பை பார்ட்டிகளில் இந்த போதைப்பொருள் மிகவும் பிரபலம் ஆகும். கடந்த ஆண்டு இப்போதைப்பொருள் மகாராஷ்டிராவில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு மும்பைக்கு சப்ளை செய்யப்பட்டது. ஆனால் அத்தொழிற்சாலைகளுக்கு எதிராக மும்பை போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்ததால் அத்தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டது. ஆனால் அப்போதைப்பொருளின் தேவை மட்டும் இருந்து கொண்டே இருந்தது. கடந்த மாதம் மும்பையில் பாத்திமா(23) என்ற பங்களாதேஷ் பெண்ணை ரூ.24 லட்சம் மதிப்பிலான போதைப்பொருளுடன் மும்பை மீரா பயந்தர் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது அப்போதைப்பொருளை தெலங்கானாவில் இருந்து வாங்கி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து மும்பையில் இருந்து தனிப்படை போலீஸார் தெலங்கானாவிற்கு சென்றனர்.

கைதானவர்கள்

அவர்கள் செரமாலி என்ற இடத்தில் ஒரு மாதம் தங்கி இருந்து போதைப்பொருள் தயாரிக்கும் இடங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இக்கண்காணிப்புக்கு பிறகு ஒரே நேரத்தில் 60 இடங்களில் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் பெண் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபர் தகவல் தொழில் நுட்பத்தில் நிபுணர் ஆவார். அவர் கெமிக்கல் தொழிற்சாலை ஒன்றில் இந்த போதைப்பொருளை தயாரித்து வந்தார்.

ரெய்டு நடத்தப்பட்ட இடத்தில் இருந்து ரூ.12,000 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு போதைப்பொருள் தயாரிக்க தேவைப்படும் 35 ஆயிரம் லிட்டர் ரசாயானமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரித்தபோது தெலங்கானாவில் தயாரித்து மும்பைக்கு அனுப்பி வைத்தது தெரிய வந்தது. கடந்த பல ஆண்டுகளாக இதனை அவர்கள் தயாரித்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

சாத்தூர்: 10-ம் வகுப்பு மாணவி இளைஞருடன் தூக்கிட்டு தற்கொலை - காதல் விவகாரத்தில் விபரீதம்!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஆலங்குளம் அருகே (தொம்பகுளம்) கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரது மகன் ஆகாஷ் (22). இவர் பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு எலக... மேலும் பார்க்க

மும்பை: விநாயகர் சிலை கரைப்புக்கு 25,000 போலீஸார் பாதுகாப்பு; வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

மும்பை போக்குவரத்து காவலர் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ் ஆப் எண்ணிற்கு நேற்று ஒரு வெடிகுண்டு மிரட்டல் மெசேஜ் வந்தது. அதில் மும்பையில் கணபதி சிலை கரைப்பின் போது தாக்குதல் நடத்த 400 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமரு... மேலும் பார்க்க

டெல்லி செங்கோட்டை ஆன்மிக நிகழ்ச்சியில் ரூ.1.5 கோடி தங்க கலசங்கள் திருட்டு; மதகுருவாக வந்தவர் கைவரிசை

டெல்லி செங்கோட்டையில் ஒவ்வோர் ஆண்டும் ஜெயின் மத நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் செங்கோட்டை வளாகத்தில் தஸ்லக்ஷன் மஹாபர்வ் என்ற ஜெயின் ஆன்மிக நிகழ்ச்சி தற்போது நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சி வ... மேலும் பார்க்க

பாமக: நூலிழையில் உயிர் தப்பிய ம.க.ஸ்டாலின்; காரில் தப்பிய 8 பேர்; 5 முறை போனில் பேசிய ராமதாஸ்

கும்பகோணம், ஆடுதுறை அருகே உள்ள மேலமருத்துவக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ம.க.ஸ்டாலின். ஆடுதுறை பேரூராட்சி தலைவராக இருக்கும் இவர், பா.ம.க-வில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பத... மேலும் பார்க்க

மதுரை: `காவல் நிலையம் கட்டப்பஞ்சாயத்து செய்யுமிடமாக செயல்பட்டுள்ளது' - நீதிபதி காட்டம்!

"காவல் நிலையங்கள் வணிக ரீதியான பணப்பரிமாற்ற விவகாரங்களில் எப்படி கட்டப்பஞ்சாயத்து செய்கின்றன என்பதற்கு இந்த காவல் நிலையம் ஒரு உதாரணம்" என்று மதுரையிலுள்ள திலகர் திடல் காவல் நிலையத்தை குற்றம்சாட்டி உய... மேலும் பார்க்க

இன்ஸ்பெக்டர் லஞ்சம் கேட்ட விவகாரம்: நடவடிக்கை எடுக்காத லஞ்ச ஒழிப்புத்துறை; சிபிஐ விசாரணை கோரி மனு

தன்னிடம் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க ஆதாரத்துடன் புகார் அளித்தும், கண்டுகொள்ளாத லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை கேட்டுப் பாதிக்கப்பட்டவர் தொடர்ந்துள்ள வழக்கு பரபரப... மேலும் பார்க்க