செய்திகள் :

Rain: ``தமிழகம், புதுச்சேரியில் 12 வரை மழை தொடரும்'' - வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்

post image

தமிழகத்தில் வரும் 12-ம் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் வடக்கு, தெற்கு மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 5 செ.மீ.வும், கோவை மாவட்டம் சின்னக்கல்லார் மற்றும் நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ.வும் மழை பதிவாகியுள்ளது.

மழை
மழை

தென் மாவட்டப் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் 12-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (செப். 7) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை மறுதினம், கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

 மழை
மழை

10-ம் தேதி பல மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

வரும் 10-ம் தேதி சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் இன்று சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Afghanistan: ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 1,400 ஆக உயர்வு; காரணம் என்ன?

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31), ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள பகுதி ஆகும்.இந்த நிலநடுக்கம், ஆப்கானிஸ்தானின் உள்ளூ... மேலும் பார்க்க

Rain Alert: "செப்டம்பரில் இங்கெல்லாம் அதிக மழை பெய்யும்" - வானிலை மையத்தின் எச்சரிக்கை என்ன?

தெற்கில் மழை, மேற்கில் வெள்ளம் என்று ஏற்கெனவே இந்தியாவில் மழை வெளுத்து வாங்கத் தொடங்கிவிட்டது.இந்த செப்டம்பர் மாதம் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது."20... மேலும் பார்க்க

Rain Alert: 'சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழை பெய்யும்'- அப்டேட் தந்த வானிலை ஆய்வு மையம்!

கடந்த இரண்டு நாள்களாக தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. குறிப்பாக, வால்பாறை, மாஞ்சோலை (திருநெல்வேலி), கன்னியாகுமரி, ஈரோடு, திருப்பத்தூர், தேனி, நீலகி... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்

திருப்பத்தூரைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (43). இவருக்குத் திருமணம் முடிந்து பவித்ரா (40) என்ற மனைவியும், சௌஜைன்யா (7) மற்றும் சௌமையா (4) என இரு மகள்கள் இருக்கின்றனர். ராஜேஷ் குமார் சத்தீஸ்கர் மாநிலத்த... மேலும் பார்க்க

TN Rains: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? - வானிலை மையம் அறிக்கை

நேற்று இரவில் இருந்து சென்னையில் மழை பெய்து வருகிறது. நேற்று காலையும் மழை பெய்தது. ஆனால், காலை 10 மணிக்கு முன்பே, வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில், நேற்று இரவு முதல் சென்னையில் மழை பெய்த... மேலும் பார்க்க

சென்னை: ``50 நிமிடத்தில் 5 செ.மீ. மழை பதிவு" - வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று அதிகாலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்திருக்கிறது. கிண்டி, அண்ணா நகர், மந்தைவெளி, ஆதம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையார், வடபழனி, ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களில் இடிய... மேலும் பார்க்க