செய்திகள் :

பின்லேடனுக்காக அனுப்பப்பட்ட அதே குழுதான் வடகொரியாவுக்கும்? 2019-ல் அமெரிக்காவின் செயல்!

post image

2019 ஆம் ஆண்டில் வடகொரியாவில் உளவு தொடர்பாக அமெரிக்கா முயற்சி செய்ததாக அமெரிக்க செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் வடகொரியாவில் உளவுபார்ப்பு சாதனத்தைப் பொருத்த அமெரிக்காவின் சீல் குழு 6 (US SEAL Team 6) முயற்சித்ததாக நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது. இந்தக் குழுதான், ஒசாமா பின்லேடனை கொல்லவும் பணிக்கு உட்படுத்தப்பட்டது.

கடலுக்கடியில் நீந்தி, இலக்கின் கரையை அடைந்து, உளவுபார்ப்பு சாதனத்தை அங்கு பொருத்தி அல்லது நிலைநிறுத்திவிட்டு, ட்ரோன்கள் பார்வையில் இருந்து தப்பித்து மீண்டு வருவதுதான் இந்தக் குழுவின் பணி.

ஆனால், 2019-ல் வடகொரியாவின் கரையை அடைந்தபிறகு, வடகொரிய மீனவர்கள் வருவது தெரிந்தவுடன், படகில் இருந்தவர்களைக் கொன்று, அவர்களைக் கடலில் வீசியதாகவும் தகவல் தெரிவிக்கிறது. படகில் இருந்த மூவரும் நிராயுதபாணியான பொதுமக்கள் என்றும், அவர்களின் உடல் கடலில் மூழ்க வேண்டும் என்பதற்காக மார்பைக் கிழித்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, உளவுபார்ப்பு சாதனமும் பொருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வடகொரியாவில் மனிதர்களை உளவுபார்க்க வைப்பதோ அவர்களின் தலைமையைக் கண்காணிப்பதோ கடிது. அதுமட்டுமின்றி, வடகொரியாவுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளின் தோல்வி அல்லது பணயக் கைதிகள் நிலைமைக்கு வழிவகுக்கும்.

இருப்பினும், இந்த நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் கேள்வி எழுப்புகையில், அதனைப் பற்றி தெரியாது என்று அவர் மறுத்து விட்டார்.

US Navy SEALs killed North Korean civilians during botched mission

ஒப்பந்த நாடுகளுக்கு வரி விலக்கு: டிரம்ப் உத்தரவு!

பரஸ்பர வரி விதிக்கப்பட்டு, தங்களுடன் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நாடுகளின் குறிப்பிட்ட பொருள்களுக்கான கூடுதல் வரியை விலக்க அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா். இந்த உத்தரவு திங்கள்க... மேலும் பார்க்க

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி பேச்சு!

உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் பிரதமா் மோடி சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். மேக்ரானுடனான தொலைபேசி உரையாடல் சிறப்பாக இருந்ததாக குற... மேலும் பார்க்க

பிரிட்டன் அமைச்சரவை மாற்றியமைப்பு முக்கிய பொறுப்புகளில் பெண்கள்!

பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் புதிதாக மாற்றியமைத்துள்ள அமைச்சரவையின் மிக முக்கிய பொறுப்புகளுக்கு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:... மேலும் பார்க்க

ஆப்கன் வெளியுறவு அமைச்சா் முத்தாகி இந்தியப் பயணம் ரத்து!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை எதிரொலி!

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தாகியின் இந்தியப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ‘அவருக்கு எதிரான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயணத் தடையே இதற்குக் காரணம்’ என்று வெளியுறவுத் து... மேலும் பார்க்க

நைஜீரியா: பயங்கரவாதத் தாக்குதலில் 55 போ் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் புலம் பெயா்ந்த உள்நாட்டு அகதிகள் முகாமில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தவா்கள் மீது மத பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 போ் உயிரிழந்தனா். வடகிழக்குப் பகுதியில... மேலும் பார்க்க

காஸா சிட்டியில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு!

காஸா சிட்டியில் உள்ள பாலஸ்தீனா்கள் தெற்கே மவாசி எனும் தற்காலிக முகாமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிக்கு செல்ல வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் பசியால் வாடும் இந்த நகரைக்... மேலும் பார்க்க