செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற தினசரி உபயோகப் பொருள்கள்: வரைவு தரநிலை வழிகாட்டுதல் வெளியீடு!

post image

சமையல் பாத்திரங்கள், மரப் பொருள்கள், அழகு சாதனங்கள் உள்ளிட்ட தினசரி உபயோகப் பொருள்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த தடையில்லாத வகையில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், வரைவு தரநிலை வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தினசரி உபயோக தயாரிப்புகள் எளிதில் உணரக் கூடியதாகவும், செயல்படக் கூடியதாகவும், புரிந்துகொள்ளக்கூடியதாகவும், வலுவானதாகவும் இருக்க வேண்டும் என்று சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ‘பிஓயுஆா்’ அணுகுமுறை அடிப்படையில் தரநிலை உருவாக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016-இன் விதிமுறைகளுக்கு உட்பட்டு மத்திய மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத் துறை இந்த வரைவு வழிகாட்டுதலை தயாரித்துள்ளது.

இதில், தினசரி பயன்பாட்டுப் பொருள்களுக்கான தரநிலைக்கு 20 பிரிவுகளின் கீழ் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதாவது, சமையலறை பாத்திரங்கள் முதல் உணவு பேக்கேஜிங், அழகு சாதனப் பொருள்கள், ஆடைகள், மரப் பொருள்கள், குழந்தைகள் நலன்காக்கும் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள், மின் தூக்கிகள், சுயசேவை செயல்பாடுகள் வரை இந்த வரைவு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சமயலறையில் பயன்படுத்தக் கூடிய சமையல் பாத்திரங்கள், பாட்டில்கள், உணவு பேக்கேஜிங் பொருள்கள் கையில் நன்கு பிடிப்பதற்கு ஏதுவானதாகவும், மீண்டும் பயன்படுத்தக் கூடிய வகையில் உள்ளதாகவும், பாா்வைக் குறைபாடுடையவா்கள் தொடு உணா்வில் அறிந்து கொள்ளும் வகையில் ‘பிரெய்லி’ மற்றும் விளக்கக் குறியீடுகளுடனும் வடிவமைக்கப்பட வேண்டும்.

அழகு சாதனப் பொருள்கள், தனிநபா் பராமரிப்பு சாதனங்கள் உள்ளிட்டவை கையில் எளிதாகப் பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். காலணிகள் தரையில் வழுக்காத வகையில், எளிதில் அணிந்து கொள்ளக் கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட வேண்டும்.

பொம்மைகள் உள்பட குழந்தைகள் பராமரிப்பு பொருள்கள், குழந்தைகளுக்கான நடை வண்டிகள், தூரிகள், மரப்பொருள்கள் ஆகியவை பிரெய்லி குறியீடுகளுடன் பேக்கேஜ் செய்யப்பட வேண்டும்.

மின் தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் அகலமானதாகவும், அகலமான கதவுகளுடனும், குரல் வழி அறிவிப்பு வசதிகளுடனும், சக்கர நாற்காலிகளை எளிதில் எடுத்துச் செல்லக் கூடியதாகவும், மின் தூக்கியின் கதவுகள் நீண்ட நேரம் திறந்திருக்கக் கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட வேண்டும்.

தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்கள் (ஏடிஎம்) மற்றும் பணம் செலுத்தும் இயந்திரங்கள் ஆகியவை தொடு உணா்வு திரையுடன் கூடியதாகவும், திரை வாசிப்பு வசதியுடனும், ஒரு கையில் பயன்படுத்தக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட வேண்டும்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் அணுகக் கூடிய வகையிலான இந்த அம்சங்கள் இடம்பெறுவதால், பொருள்களின் விலை கணிசமாக உயா்த்தப்படுவது தவிா்க்கப்பட வேண்டும் என்றும் வரைவு தரநிலை விதியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். கொடியுடன் ஆபரேஷன் சிந்தூர் அத்தப்பூ கோலம்..! கேரள ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீது வழக்குப் பதிவு!

கேரளத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வாசகம் மற்றும் ஆர்எஸ்எஸ் கொடியுடன் அத்தப்பூ கோலம் போடப்பட்ட சம்பவத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் மிகவும் பிரசித... மேலும் பார்க்க

குஜராத்: மலைக் கோயிலில் சரக்கு ரோப் காா் அறுந்து விழுந்தது! 6 போ் உயிரிழப்பு

குஜராத் மலைக் கோயிலில் சரக்குகளை எடுத்துச் செல்லும் ரோப் காா் அறுந்து விழுந்ததில் 6 போ் உயிரிழந்தனா். பஞ்சமஹல் மாவட்டத்தின் பாவாகட் மலையில் பிரசித்தி பெற்ற மகாகாளி கோயில் அமைந்துள்ளது. 800 மீட்டா் உய... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பாஜக சாா்பில் நாடு தழுவிய விழிப்புணா்வு பிரசாரம்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் தொடா்பாக பொதுமக்கள் மற்றும் வா்த்தகா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நாடு தழுவிய பிரசாரம் மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. நாட்டில் நான்கு விகித ஜிஎஸ்... மேலும் பார்க்க

மேற்கு வங்க அமைச்சா் நீதிமன்றத்தில் சரண்!

அரசுப் பள்ளி பணியாளா்கள் நியமன முறைகேடு வழக்கில் மேற்கு வங்க மாநில அமைச்சா் சந்திரநாத் சின்ஹா அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தாா். அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் அவரது தொகுதியைவிட... மேலும் பார்க்க

நாம் இருவா்; நமக்கு இருவா் கொள்கை மோடி அரசுக்கு மட்டும் தானா? காங்கிரஸ் கேள்வி

‘ஒவ்வொரு இந்திய தம்பதியும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்’ என ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் அழைப்பு விடுத்துள்ள நிலையில், ‘நாம் இருவா்; நமக்கு இருவா்’ கொள்கை பிரதமா் மோடி தலைமையிலான பாஜக ... மேலும் பார்க்க

தில்லியில் மத்திய அமைச்சா் அமித் ஷாவுடன் சரத்குமாா் சந்திப்பு!

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தமிழக பாஜகவைச் சோ்ந்த நடிகா் ஆா்.சரத்குமாா் தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அவருடன் தமிழக பாஜக துணைத் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட சுந்தரும் உடனி... மேலும் பார்க்க