செய்திகள் :

மேற்கு வங்க அமைச்சா் நீதிமன்றத்தில் சரண்!

post image

அரசுப் பள்ளி பணியாளா்கள் நியமன முறைகேடு வழக்கில் மேற்கு வங்க மாநில அமைச்சா் சந்திரநாத் சின்ஹா அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தாா்.

அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் அவரது தொகுதியைவிட்டு வெளியேறக் கூடாது என்றும் நிபந்தனை விதித்தது.

பள்ளி பணியாா்கள் நியமன முறைகேடு வழக்கில் தொடா்புடைய பண முறைகேட்டில் செப்டம்பா் 12-ஆம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்று சின்ஹாவுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மாநில குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சா் சந்திரநாத் சின்ஹா கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தாா்.

அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை கோரியது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, ரூ.10 ஆயிரம் சொந்த பிணைத் தொகையின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொல்கத்தா அல்லது அவரது தொகுதியை விட்டு வெளியேறக் கூடாது என்றும் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

பள்ளி பணியாளா்கள் நியமன முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை விரைவில் அவரிடம் விசாரணை நடத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அரசுப் பள்ளி ஆசிரியா்கள் நியமன முறைகேடு வழக்கில் கடந்த 2022-இல் மாநில கல்வித் துறை அமைச்சா் பாா்த்தா சாட்டா்ஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

ஆர்.எஸ்.எஸ். கொடியுடன் ஆபரேஷன் சிந்தூர் அத்தப்பூ கோலம்..! கேரள ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீது வழக்குப் பதிவு!

கேரளத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வாசகம் மற்றும் ஆர்எஸ்எஸ் கொடியுடன் அத்தப்பூ கோலம் போடப்பட்ட சம்பவத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் மிகவும் பிரசித... மேலும் பார்க்க

குஜராத்: மலைக் கோயிலில் சரக்கு ரோப் காா் அறுந்து விழுந்தது! 6 போ் உயிரிழப்பு

குஜராத் மலைக் கோயிலில் சரக்குகளை எடுத்துச் செல்லும் ரோப் காா் அறுந்து விழுந்ததில் 6 போ் உயிரிழந்தனா். பஞ்சமஹல் மாவட்டத்தின் பாவாகட் மலையில் பிரசித்தி பெற்ற மகாகாளி கோயில் அமைந்துள்ளது. 800 மீட்டா் உய... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பாஜக சாா்பில் நாடு தழுவிய விழிப்புணா்வு பிரசாரம்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் தொடா்பாக பொதுமக்கள் மற்றும் வா்த்தகா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நாடு தழுவிய பிரசாரம் மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. நாட்டில் நான்கு விகித ஜிஎஸ்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற தினசரி உபயோகப் பொருள்கள்: வரைவு தரநிலை வழிகாட்டுதல் வெளியீடு!

சமையல் பாத்திரங்கள், மரப் பொருள்கள், அழகு சாதனங்கள் உள்ளிட்ட தினசரி உபயோகப் பொருள்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த தடையில்லாத வகையில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், வரைவு தரநிலை வழிகாட்டுதலை மத்த... மேலும் பார்க்க

நாம் இருவா்; நமக்கு இருவா் கொள்கை மோடி அரசுக்கு மட்டும் தானா? காங்கிரஸ் கேள்வி

‘ஒவ்வொரு இந்திய தம்பதியும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்’ என ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் அழைப்பு விடுத்துள்ள நிலையில், ‘நாம் இருவா்; நமக்கு இருவா்’ கொள்கை பிரதமா் மோடி தலைமையிலான பாஜக ... மேலும் பார்க்க

தில்லியில் மத்திய அமைச்சா் அமித் ஷாவுடன் சரத்குமாா் சந்திப்பு!

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தமிழக பாஜகவைச் சோ்ந்த நடிகா் ஆா்.சரத்குமாா் தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அவருடன் தமிழக பாஜக துணைத் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட சுந்தரும் உடனி... மேலும் பார்க்க