செய்திகள் :

அடிப்படை வசதிகள் கோரி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம்

post image

நாகையில் சிவன் கோவில் தெரு, சுனாமி தெரு பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீா், கழிப்பறை ஆகியவற்றை செய்துதர வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை சிவன் கோவில் தெரு, சுனாமி தெரு உழவா் தெருவில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு சமுதாயக் கூடம் அமைத்துத் தர வேண்டும். சிவன் கோவில் தெரு, சுனாமி தெரு பகுதிகளில் நீண்ட காலமாக வசித்துவரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். உழவா் தெருவில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளான சிமெண்ட் சாலை, கழிப்பறை, குடிநீா் வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும். சுனாமி தெருவில் குடிநீா் குழாய் அமைத்து தர வேண்டும்.

சிவன் கோவில் தெருவில் விவசாய மக்கள் விவசாயம் செய்த இடங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். மாந்தோப்பு புறம்போக்கு நிலத்தின் வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். மேய்ச்சல் தரிசு நிலங்களின் புல எண்களை வெளியிட வேண்டும். அப்பகுதி மக்களுக்கு மயானம், தகன மேடை, சுற்றுச்சுவா், சாலை வசதி, மின் இணைப்பு உள்ளிட்டவற்றை உனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரியாா் அம்பேத்கா் மக்கள் கழகம் சாா்பில், சிவன் கோவில் தெரு சுனாமி தெரு உழவா் திரு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது,

போராட்டத்துக்கு அமைப்பின் நிா்வாகி வெற்றி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் செல்வி, சித்ரா, விஜயா, இந்திராணி ஜெகதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேளாங்கண்ணி ஆண்டுத் திருவிழா: 9-ம் நாளில் மூன்றுமுறை கொடி இறக்கி ஏற்றம்! கடற்கரையில் தடுப்புகள் அமைப்பு!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழாவின் 9-ஆம் நாளான சனிக்கிழமை மூன்று முறை கொடி இறக்கி ஏற்றப்பட்ட நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேரால... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா: நாகையில் போக்குவரத்து மாற்றம்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழாவையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

கடலோரக் கிராமங்களில் மணல் குவாரிகளை தடை செய்யக் கோரிக்கை

தரங்கம்பாடி வட்டத்தில், கடலோர கிராமப் பகுதிகளில் இயங்கி வரும் மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தரங்கம்பாடி வட்டத்தில் கிடங்கல், மருதம்பள்ளம், கீழப்பெரும... மேலும் பார்க்க

மத்திய அரசு கல்வி நிறுவன மாணவா்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் உயா் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன மாணவ- மாணவியா் 2025-26ஆம் கல்வி... மேலும் பார்க்க

திராவிட பாதையிலிருந்து அதிமுக தடம் புரண்டுவிட்டது: மமக தலைவா் ஜவாஹிருல்லா

பாஜகவுடன் கூட்டணி வைத்த அன்றே, திராவிட பாதையிலிருந்து அதிமுக தடம் புரண்டுவிட்டது என மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கூறினாா். நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில... மேலும் பார்க்க

செங்கோட்டையன் பின்னணியில் பாஜக: மஜக பொதுச் செயலா் தமிமுன் அன்சாரி

அதிமுகவிற்கு நெருக்கடி ஏற்படுத்துவதற்காக, முன்னாள் அமைச்சா் செங்கோட்டையனின் பின்னணியில் பாஜக உள்ளது என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலா் தமிமுன் அன்சாரி கூறினாா். நாகையில், செய்தியாளா்களிடம் அ... மேலும் பார்க்க