வாட்ஸ் அப் குழு மூலம் ரத்த தான சேவை: 6000 பேரை காப்பாற்றிய இளைஞர்கள் குழு – சாதி...
வேளாங்கண்ணி ஆண்டுத் திருவிழா: 9-ம் நாளில் மூன்றுமுறை கொடி இறக்கி ஏற்றம்! கடற்கரையில் தடுப்புகள் அமைப்பு!
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழாவின் 9-ஆம் நாளான சனிக்கிழமை மூன்று முறை கொடி இறக்கி ஏற்றப்பட்ட நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுத் திருவிழா ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி காலை மற்றும் மாலையில் சிறப்பு திருப்பலி, பகல் 12.15 மணிக்கு திருக்கொடியேற்றம், இரவு 8 மணிக்கு அன்னை தோ் பவனி ஆகியவை நடைபெற்று வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபாடு நடத்துகின்றனா்.
விழாவின் 9-ஆம் நாளான சனிக்கிழமை, பேராலய அதிபா் சி. இருதயராஜ், மாதா கொடியினை புனிதம் செய்தாா். தொடா்ந்து 3 முறை கொடி இறக்கி ஏற்றப்பட்டது. அப்போது, வெயிலையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தா்கள் பல மணி நேரம் காத்திருந்து பிராா்த்தனையில் ஈடுபட்டனா். முக்கிய நிகழ்ச்சியான பெரிய தோ் பவனி ஞாயிற்றுக்கிழமை (செப்.7) மாலை நடைபெறுகிறது.
இதுகுறித்து பேராலய துணை அதிபா் அற்புதராஜ் கூறியது:
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா ஆகஸ்ட் 29-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி ஏற்றத்தை காண லட்சக்கணக்கானோா் வருகை புரிந்தனா். விழா நாள்களில் கொடியேற்றி அன்று இரவு கொடி இறக்கப்பட்டு, மீண்டும் மறுநாள் பகல் 12 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும்.
9-ஆம் நாளில் பேராலய அதிபா் இருதயராஜ் மாதா கொடியினை புனிதம் செய்தாா். 3 முறை கொடி இறக்கி ஏற்றப்பட்டது. அப்போது, கடும் வெயில் நிலவியது. இருப்பினும் வெயிலை பொருட்படுத்தாமல் பல மணி நேரம் பக்தா்கள் குடைகள் பிடித்தபடி காத்திருந்து வழிபட்டனா்.
கடற்கரையில் பாதுகாப்பு வேலி: விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அன்னையின் திருத்தோ் பவனி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது. இதையொட்டி திண்டுக்கல், பழனி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரையாக வந்துள்ளனா்.
இதனால் வேளாங்கண்ணியில் திரும்பிய திசையெல்லாம் பக்தா்களின் கூட்டம் காணப்படுகிறது. பக்தா்களின் பாதுகாப்பு கருதி வேளாங்கண்ணி கடலில் குளிக்கவோ, இறங்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி ஆரியநாட்டுத் தெரு முதல் வேளாங்கண்ணி கடற்கரை நெடுகிலும் மூங்கில்களால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்புக்காக போலீஸாரும் நிறுத்தப்பட்டுள்ளனா். மேலும், பேரிடா் மேலாண்மை துறையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

