செய்திகள் :

கெங்கவல்லியில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்!

post image

கெங்கவல்லியில் 35 வருடங்களுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்தித்து மகிழ்ந்தனர்.

கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1988 - 1990 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் கணித, அறிவியல், கலை, தெழில்பிரிவு குரூப்களில் பயின்ற அனைத்து மாணவ, மாணவிகளும் 35 வருடங்களுக்குப்பிறகு நடந்த சந்திப்பு, பள்ளியில் நடைபெற்றது. இதற்கு ஆசிரியர் முருகன் தலைமை வகித்தார்.

ஆத்தூர் துணிக்கடை அதிபர் எல்.செந்தில்குமார், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஓவிய ஆசிரியர் ராஜாராம் வரவேற்றார். பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் ஜோ. அருள்பிரகாஷ் சிறப்பு விருந்தினராக மாணவர்கள் அன்றும், இன்றும் குறித்து சிறப்புரையாற்றினார்.

இதில், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் பி.அமுதா, தஞ்சை மருத்துவ கல்லூரி பேராசிரியை க.உமா உள்பட 150 பேருக்கு சிறந்த மாணவர் மற்றும் சிறந்த மாணவி விருதும், தற்போதைய கெங்கவல்லி தலைமையாசிரியர்கள் (ஆண்கள் பள்ளி) சாமிவேல், மகளிர் பள்ளி வசந்தாகுமாரி, மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு பயிற்றுவித்த 20 ஆசிரியர்கள் ஆகியோருக்கு சிறந்த நல்லாசான் விருதும், சேலம் டயட் விரிவுரையாளர் கலைவாணனுக்கு சிறந்த கல்வியாளர் விருது, கெங்கவல்லி ஆர்சி பள்ளி தலைமையாசிரியர் ஜாக்குலின் புஷ்பராணி, கெங்கவல்லி தனியார் மருத்துவர் மார்ட்டினா ஆகியோருக்கு சிறந்த சமூகசேவகி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

முன்னாள் மாணவர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்து பழைய கால நினைவுகளை நினைவூட்டி மகிழ்ந்தனர். கெங்கவல்லி அரசு மகளிர் பள்ளிக்கு பிரிண்டரும், கெங்கவல்லி அரசு ஆண்கள் பள்ளிக்கு சுழல்கோப்பை, யுபிஎஸ் மற்றும் பேட்டரி ஆகியவைகளை அன்பளிப்பாக வழங்கினர். பா.மனோன்மணி நன்றி கூறினார்.

இதையும் படிக்க | சந்திரகிரகணம் - தஞ்சை பெரிய கோயிலின் நடை அடைப்பு

Former students meet after 35 years in Kengavalli

அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

சந்திரகிரகணம் - தஞ்சை பெரிய கோயிலின் நடை அடைப்பு

சந்திரகிரகணத்தையொட்டி தஞ்சை பெரிய கோயிலின் நடை ஞாயிற்றுக்கிழமை நான்கு மணிக்கு சாத்தப்பட்டது. சந்திரகிரகணம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறுவதை யொட்டி தமிழக முழுவதும் பல்வேறு கோயில்கள் நடை சாத்தப்பட்டு வரு... மேலும் பார்க்க

லண்டனில் பென்னிகுயிக் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னிகுயிக்கின் குடும்பத்தினரை லண்டனில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு ஒருவார கால பயணமாக, கடந்த 30-ஆம் தேதி... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியின் ஐந்தாம் கட்ட பிரசாரப் பயணம் செப்.17-இல் தொடக்கம்

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தனது 5-ஆவது கட்ட சுற்றுப்பயணத்தை செப்.17-ஆம் தேதி தொடங்கவுள்ளாா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எனும் ப... மேலும் பார்க்க

அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து சத்யாபாமா நீக்கம்! இபிஎஸ் அதிரடி!

அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமா கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சுக்கு சத்தியபாமா ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், அவரைக் கட்சி பொறுப்புகளில் இரு... மேலும் பார்க்க

எனக்குப் பின்னால் அண்ணாமலை இருக்கிறாரா? டிடிவி தினகரன் விளக்கம்!

எனக்குப் பின்னால் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருக்கிறாரா? என்ற கேள்விக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மமுக பொதுச் செயலாளர் டிடி... மேலும் பார்க்க