செய்திகள் :

"எடப்பாடி பழனிசாமி விவரமானவர், இந்நேரம் முடிவு எடுத்திருப்பார்" - சர்டிபிகேட் கொடுத்த எ.வ.வேலு

post image

"அதிமுகவில் பெரிய சலசலப்பு ஒன்றுமில்லை, நண்பர் எடப்பாடி பழனிசாமி விவரமானவர், இந்நேரம் முடிவு எடுத்திருப்பார்" என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு பாராட்டும் வகையில் பேசியுள்ளார்.

எ.வ. வேலு
எ.வ. வேலு

மதுரையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் பிரவீன்குமார் ஆகியோருடன் சென்று நேற்று ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

"190 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த நிலையில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதமானது. தற்போது மேம்பாலப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மதுரையின் மற்ற பகுதிகளிலும் 65 கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. தமிழ் வளர்த்த மாமதுரைக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன" என்றவரிடம்,

'அதிமுகவில் செங்கோட்டையனால் ஏற்பட்டுள்ள சலசலப்பு குறித்து' கேட்டதற்கு


"அதிமுகவில் பெரிய சலசலப்பு ஒன்றும் இல்லை. அவர்கள் கட்சிப் பிரச்சனையில் கருத்து கூறுவது சரியாக இருக்காது. ஆனாலும்கூட கட்சியின் இன்றைய தலைவரும் நண்பருமான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்க வேண்டும். என்னுடைய அனுபவத்தில் எந்தத் தலைமையாக இருந்தாலும் ஒரு தீர்க்கமான முடிவை பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்டி முடிவெடுப்பார்கள். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி விவரமானவர், இந்நேரம் முடிவு எடுத்திருப்பார்" என்றார்.

எ.வ.வேலு

'எடப்பாடி பழனிசாமி விவரமானவர், இந்நேரம் முடிவு எடுத்திருப்பார்' என்று எ.வ. வேலு கருத்து தெரிவித்த சிறிது நேரத்தில், செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

``செங்கோட்டையனுக்கு உரிமை இல்லை; அவருக்குப் பின்னால் இருப்பவர் இவர்தான்'' - தளவாய் சுந்தரம் ஓபன்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக வெளிப்படையாகவே பனிப்போர் நடந்து வந்தது.இவ்வாறான சூழலில், நேற்று முன்தினம் (செப்டம்பர் 5)... மேலும் பார்க்க

``நயினாரின் செயல் வருத்தத்தைக் கொடுத்தது; அதிமுக-வே போதும் என நினைத்தால்'' - TTV தினகரன் பளீச்

தமிழ்நாட்டில் தற்போது அரசியல் களத்தில் அ.தி.மு.க – பா.ஜ.க இணைந்த என்.டி.ஏ கூட்டணியில் நடைபெறும் சம்பவங்கள் பேசுபொருளாக உள்ளன.முதலில், கூட்டணியிலிருந்து ஓ.பி.எஸ் வெளியேறினார். அதையடுத்து, அ.தி.மு.க-வில... மேலும் பார்க்க

செங்கோட்டையனைத் தொடர்ந்து சத்தியபாமாவின் பதவி பறிப்பு - எடப்பாடியின் அடுத்த அதிரடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் த... மேலும் பார்க்க

``ராஜினாமா செய்யப் போகிறேன், நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்'' - செங்கோட்டையன் ஆதரவாளர் சத்யபாமா

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் த... மேலும் பார்க்க

``செங்கோட்டையனை உறுதியாகச் சந்திப்பேன்'' - ஓ.பன்னீர்செல்வம் பேசியது என்ன?

செங்கோட்டையனை உறுதியாகச் சந்திப்பேன் என்று அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், "அதிமுக ஒன்று ச... மேலும் பார்க்க

``டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் சமரசம் பேசத் தயாராக இருக்கிறேன்'' -நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் த... மேலும் பார்க்க