தெருநாய் விவகாரம்: ``நாய்களுக்காக மனிதர்களை வெறுப்பது நல்ல மனோபாவம் அல்ல” - எஸ்.வி. சேகர்
சமீபத்தில் தெருநாய் விவகாரம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற விஷயத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிலைபாடு ஒன்றாகவே உள்ளது.
இதற்கிடையில், “தெருநாய்களுக்கும் நீதி வேண்டும்” என்ற முழக்கத்துடன் ஒரு குழு பேரணி நடத்தியது. அதன் பின்னர், தெருநாய்கள் தொடர்பான விவாதத்தை ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் முன்னெடுத்தது.
அதில் சின்னத்திரை நடிகை அம்மு, படவா கோபி உள்ளிட்ட சில திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர். அந்த நிகழ்ச்சி சமூக ஊடகங்களில் பெரும் விவாதமாகியது.
இந்த நிலையில், சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தேர்தலில் வெற்றிப்பெற்ற புதிய நிர்வாகிகளின் அறிமுக விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் எஸ்.வி சேகர், ``கடந்த 15 நாட்களாக சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக இருப்பது அம்மு தான் நாய்களுக்குள் நடக்கும் சண்டை போதாது என இப்போது நாய் வளர்ப்பவர்கள் எல்லாம் சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள்.
நானே மூன்று நாய்களை வளர்க்கிறேன். தெருவில் வரும் நாய்களுக்கு என்னால் முடிந்த அளவில் வாசலில் உணவு வைப்பேன். அதற்காக நாய் கடித்ததற்கெல்லாம் நாம் பொறுப்பேற்க முடியுமா?
இரண்டும் உயிர்தான் என்றாலும், நம் வீட்டிலேயே ஒரு நாய் நம் குழந்தையை கடித்துவிட்டால், நாயையே வெளியே அனுப்புவோம்; குழந்தையை தூக்கி வெளியே போட மாட்டோம்.

இப்பொழுது டிவிகளில் டிஆர்பிக்காக வச்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள். நாம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். சிலர் வீட்டில் பூனை, எலி, அணில் வளர்க்கிறார்கள். யாருக்கு என்ன பிடிக்கிறதோ, அதை அவர்கள் உரிய முறைப்படி வளர்த்துக் கொள்ளட்டும்.
அதற்காக எதையும் வளர்க்காதவர்களை “எனக்கு பிடிக்காது” எனச் சொல்வதும், மனிதர்களை வெறுப்பதும் நல்ல மனோபாவம் அல்ல. அன்பு செலுத்துங்கள்; பிரிவினை உண்டாக்கும் வார்த்தைகளை நாம் பயன்படுத்தக்கூடாது," என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...