செய்திகள் :

தெருநாய் விவகாரம்: ``இது அம்முவுக்காக அல்ல, பொதுவாகச் சொல்கிறேன்'' - நடிகர் ராதாரவி

post image

இந்தியாவில் தெருநாய்கள் அதிகரித்து வருவது, தெருநாய் கடி காரணமாக உயிரிழப்புகள் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தெருநாய்களுக்கு ஆதரவானவர்களும், அவற்றை எதிர்க்கும் தரப்பினரும் தங்களது வாதங்களை மாறி மாறி முன்வைத்து வருகின்றனர்.

தெருநாய் தொல்லைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகள், திட்டங்களை வகுத்து வருகிறது. இதற்கிடையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொது மக்களும் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்து வருவதும் பேசுபொருளானது.

நடிகை அம்மு
நடிகை அம்மு

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில், நடிகை அம்மு கலந்துக்கொண்டு தெருநாய்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த மாதம் நடந்த சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தேர்தலில் வெற்றிப்பெற்ற புதிய நிர்வாகிகள் அறிமுக விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் ராதா ரவி, ``அம்முவுக்கு ஒரு விஷயம் சொல்ல வேண்டும். இந்த நாயை விட்டால் என்ன? பிடித்தால் என்ன? நீ எதற்கு அந்த விவாதத்திற்கு சென்றாய்? நன்றியுள்ள மிருகம்தான் நாய்.

அதே நேரம் அதை கவனிக்காமல் விட்டால் அது அப்படியே இருக்கும். இப்பொழுதெல்லாம் நாய்க்காக மட்டுமே மரியாதை கொடுக்கிறார்கள்; மனிதர்களுக்கு கொடுப்பதில்லை.

வளர்ப்பு நாய்
வளர்ப்பு நாய்

நாய் எப்போதும் நன்றியோடு இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நாய் கடித்து மட்டுமல்ல, பூனை கடித்தாலும் ரேபிஸ் வரும் என ஒரு மருத்துவர் தெரிவிக்கிறார்.

ஊசி போட்டு ரேபிஸிலிருந்து நம்மை தற்காப்பு செய்யலாம் என்று கூறப்படுகிறதே. ஆனால் எத்தனை நாய்க்கு ஊசி போட முடியும்? நாய் எச்சில் பட்டாலும் ரேபிஸ் வரும் என்றும் கூறுகிறார்கள்.

தெருநாய்களைப் பிடிக்கக் கூடாது எனச் சொல்பவர்கள் யாரும், அந்த நாய்களை காப்பாற்றப் போவதில்லை. இது அம்முவுக்காக அல்ல, பொதுவாகச் சொல்லும் கருத்து." என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Red Moon: `ரத்த நிலவு' இந்தியா உள்பட பல நாடுகளில் இன்று சந்திர கிரகணம்!

சந்திர கிரகணம்:இன்று இரவு இந்தியா உள்பட உலகின் பல நாடுகளிலிருந்து முழு சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் இந்த கிரகணத்தின் போது நிலவு செந்நிறத்தில் காட்சியளிக்கும் எனவும் இந்திய வான்... மேலும் பார்க்க

தெருநாய் விவகாரம்: ``நாய்களுக்காக மனிதர்களை வெறுப்பது நல்ல மனோபாவம் அல்ல” - எஸ்.வி. சேகர்

சமீபத்தில் தெருநாய் விவகாரம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற விஷயத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிலைபாடு ஒன்றாகவே உள்ளது.இதற்கிடையில், “தெருநாய்களுக... மேலும் பார்க்க

Gaza: 23 நிமிடங்கள் கைதட்டல் வாங்கிய காசா படம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் காரணமாக அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.தொடர்ந்த தாக்குதல்களால் காசா மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

Dolce Vento: புறப்பட்ட சில நிமிடங்களில் மூழ்கிய சொகுசுக் கப்பல் - வைரலாகும் வீடியோ! - என்ன நடந்தது?

சொகுசு கப்பல்:துருக்கியில் ரூ.7 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட சொகுசு கப்பல் கடலில் இறக்கப்பட்ட சில நிமிடங்களுக்குள்ளேயே மூழ்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது. கடந்த 2-ம் தேதி துருக்கியின் ... மேலும் பார்க்க

துபாயில் ரூ.35 கோடி லாட்டரி வென்ற இந்திய தொழிலாளி - என்ன செய்யப் போகிறார் தெரியுமா?

துபாயில் வசிக்கும் இந்தியர் ஒருவர், 1 மில்லியன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் லாட்டரியில் வெற்றி பெற்றுள்ளார்.கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி அபுதாபி பிக் டிக்கெட் சீரிஸ் 278 டிரா நடைபெற்றது. இதில் சந்தீப... மேலும் பார்க்க

Fahadh Faasil: நடிகர் பஹத் பாசில் வாங்கியிருக்கும் `Ferrari Purosangue' - மதிப்பு என்ன தெரியுமா?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருப்பது போல சிலருக்கு கார் கலெக்‌ஷன் பழக்கம் இருக்கும். இந்தியாவில் கார் கலெக்‌ஷன் செய்பவர்களின் பட்டியலை எடுத்தால் அதில் மலையாள நடிகர் ஃபஹத் பாசிலை தவிர்க்கவே முடியா... மேலும் பார்க்க