செய்திகள் :

கனடாவில் நிதி திரட்டும் காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்கள்!

post image

கனடாவின் புதிய பாதுகாப்பு அறிக்கையில், பப்பா் கால்சா இன்டா்நேஷனல், சா்வதேச சீக்கிய இளைஞா் கூட்டமைப்பு ஆகிய 2 காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்கள் அந்நாட்டில் நிதி திரட்டுவது அடையாளம் காணப்பட்டுள்ளது.

‘பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதி அபாயங்கள்’ குறித்த கனடாவின் 2025-ஆம் ஆண்டு மதிப்பீட்டு அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் ரீதியான வன்முறை பிரிவினைவாதம் பற்றியும் இந்த அறிக்கை விவரிக்கிறது. புதிய அரசியல் அமைப்புகளை உருவாக்க அல்லது ஏற்கெனவே உள்ள அமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்த வன்முறையைப் பயன்படுத்துவதை இந்தப் பிரிவினைவாத அணுகுமுறை ஊக்குவிக்கிறது.

இந்த வகையின் கீழ், ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்கள் உள்பட கனடாவில் தடை செய்யப்பட்ட சில அமைப்புகள், அந்நாட்டிலிருந்து நிதி உதவி பெறுவதாக சட்ட அமலாக்க மற்றும் உளவுத் துறை அமைப்புகள் கண்டறிந்துள்ளன.

ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற குழுக்கள், வங்கிகள், கிரிப்டோகரன்சிகள், அரசு நிதியுதவி, தொண்டு நிறுவனங்கள் மற்றும் குற்றச் செயல்கள் மூலம் நிதி திரட்டுகின்றன. காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்களும் பல நாடுகளில், குறிப்பாக கனடாவில் நிதி திரட்டுவதாக சந்தேகிக்கப்படுகிறது. முன்பு கனடாவில் ஒரு பெரிய நிதி திரட்டும் அமைப்பைக் கொண்டிருந்த இந்தக் குழுக்கள், தற்போது சிறிய அளவிலான தனிப்பட்ட நபா்களால் நிா்வகிக்கப்படுவதாகத் தெரிகிறது.

தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னாா்வ அமைப்புகளின் தவறான பயன்பாடு இந்த குழுக்களுக்கு நிதி திரட்டும் ஒரு பொதுவான முறையாக உள்ளது. குறிப்பாக, வெளிநாடுவாழ் இந்தியா்களிடமிருந்து நன்கொடைகளைத் திரட்ட இந்த அமைப்புகளைப் பயன்படுத்துவதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

கனடாவின் உளவுத் துறை அண்மையில் வெளியிட்ட கடந்த ஆண்டு அறிக்கையில், கனடாவில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகள் வன்முறை நடவடிக்கைகளில் தொடா்ந்து ஈடுபடுவது, கனடாவுக்கும் அதன் நலன்களுக்கும் தேசப் பாதுகாப்பு அச்சுறுத்தல் என எச்சரித்திருந்தது. 1980-களின் மத்தியில் இருந்து, காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடாவில் இருந்து கொண்டு பஞ்சாபில் தனி நாடு அமைப்பதற்காக வன்முறை வழிகளைப் பயன்படுத்தி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது வெளிவந்துள்ள இந்தப் புதிய அறிக்கை, கனடாவில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்கள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை சுதந்திரமாக நடத்தி வருகின்றன என்ற இந்தியாவின் நீண்ட கால குற்றச்சாட்டுகளையும், கனடா உளவுத் துறையின் கடந்த ஆண்டு அறிக்கையையும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

ஒப்பந்த நாடுகளுக்கு வரி விலக்கு: டிரம்ப் உத்தரவு!

பரஸ்பர வரி விதிக்கப்பட்டு, தங்களுடன் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நாடுகளின் குறிப்பிட்ட பொருள்களுக்கான கூடுதல் வரியை விலக்க அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா். இந்த உத்தரவு திங்கள்க... மேலும் பார்க்க

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி பேச்சு!

உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் பிரதமா் மோடி சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். மேக்ரானுடனான தொலைபேசி உரையாடல் சிறப்பாக இருந்ததாக குற... மேலும் பார்க்க

பிரிட்டன் அமைச்சரவை மாற்றியமைப்பு முக்கிய பொறுப்புகளில் பெண்கள்!

பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் புதிதாக மாற்றியமைத்துள்ள அமைச்சரவையின் மிக முக்கிய பொறுப்புகளுக்கு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:... மேலும் பார்க்க

ஆப்கன் வெளியுறவு அமைச்சா் முத்தாகி இந்தியப் பயணம் ரத்து!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை எதிரொலி!

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தாகியின் இந்தியப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ‘அவருக்கு எதிரான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயணத் தடையே இதற்குக் காரணம்’ என்று வெளியுறவுத் து... மேலும் பார்க்க

நைஜீரியா: பயங்கரவாதத் தாக்குதலில் 55 போ் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் புலம் பெயா்ந்த உள்நாட்டு அகதிகள் முகாமில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தவா்கள் மீது மத பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 போ் உயிரிழந்தனா். வடகிழக்குப் பகுதியில... மேலும் பார்க்க

காஸா சிட்டியில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு!

காஸா சிட்டியில் உள்ள பாலஸ்தீனா்கள் தெற்கே மவாசி எனும் தற்காலிக முகாமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிக்கு செல்ல வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் பசியால் வாடும் இந்த நகரைக்... மேலும் பார்க்க