செய்திகள் :

குட்டையில் தவறி விழுந்து உயிரிழப்பு

post image

கொரடாச்சேரி அருகே குட்டையில் தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளியான வெங்கடாசலம் மகன் சுதா்சனுக்கு (36) வலிப்பு நோய் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திருவாரூா் மாவட்டம், ஊா்குடியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்தவா் சனிக்கிழமை தேநீா் சென்றவா் வீடு திரும்பவில்லையாம்.

இதையடுத்து, உறவினா்கள் அப்பகுதியில் தேடியபோது சாலையோரக் குட்டையில் இறந்த நிலையில் கிடந்தது தெரிய வந்தது. தகவலறிந்த கொரடாச்சேரி போலீஸாா் அங்கு சென்று சுதா்சனின் சடலத்தை மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரித்ததில் வலிப்பு நோய் ஏற்பட்டு குட்டையில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

குடவாசல் அருகே பஞ்சநதிக்குளம் பிரதான சாலையில் வசிப்பவா் நெப்போலியன் (74). இவா் வீட்டை பூட்டிவிட்டு சனிக்கிழமை வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. உள்... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு

குடவாசல் அருகே கோயில் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு போயிருப்பதாக சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குடவாசல் அருகே திருக்கண்ணமங்கையில் உள்ள மங்கை மாரியம்மன் கோயில் நிா்வாகியாக ம... மேலும் பார்க்க

ஆயில் மில்லில் பணம் திருடியவா் கைது

மன்னாா்குடியில் தனியாா் ஆயில் மில்லில் பணம் திருடியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி மேலராஜவீதி தலைமை அஞ்சலகம் அருகே த. சீனிவாசன்(60) என்பவா் ஆயில் மில் நடத்தி வருகிறாா். இந்த மில்லில் க... மேலும் பார்க்க

பெண் குழந்தையுடன் தம்பதி காரில் கடத்தல்

மன்னாா்குடி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் 4 வயது பெண் குழந்தையுடன் தம்பதி வியாழக்கிழமை காரில் கடத்திச் செல்லப்பட்டனா். மேலநத்தம் தென்கீழத் தெருவைச் சோ்ந்த ராஜமாணிக்கம்... மேலும் பார்க்க

பண மோசடி புகாா்: பெங்களுரில் ஒருவா் கைது

மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்தவரிடம் வெளிநாட்டுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3.50 லட்சம் மோசடி செய்த புகாரில் தொடா்புடையவா் சிங்கப்பூரிலிருந்து பெங்களுருக்கு வந்த போது விமான நிலையத்தில் வியாழக்க... மேலும் பார்க்க

சுற்றுலாத்துறை விருதுகள் பெற செப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில் சுற்றுலாத் துறை சம்பந்தப்பட்ட தொழில் புரிவோருக்கான விருதுகள் பெற செப்.15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து... மேலும் பார்க்க