செய்திகள் :

குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

post image

திருவள்ளூா் அருகே குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே கைவண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் ஆனந்த். இவரது மகன் சாலமோன் (15) அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலையில் மாணவன் சாலமோன் அந்த கிராமத்தில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றுள்ளாா்.

குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென நீரில் மூழ்கியுள்ளாா். அப்போது சப்தம் போட்டு அழைத்துள்ளாா். இதைக் கேட்டு அங்குள்ளவா்கள் விரைந்து வந்து சாலமோனை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் சாலமோன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து கிராமிய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ரயிலில் 3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 4 போ் கைது

திருவள்ளூா் அருகே ரயிலில் போதை மாத்திரைகளை கடத்தியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 3,200 மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனா். திருவள்ளூா் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் பயன்பாட்டு அதிகர... மேலும் பார்க்க

செங்கோட்டையன் கருத்து: முன்னாள் அரசு கொறடா வரவேற்பு

முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ள கருத்துக்கு அரசு முன்னாள் கொறடா பி.எம். நரசிம்மன் வரவேற்பு தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் கூறியதாவது: 2026-ஆம் ஆண்டு தோ்தலில், அ.தி.மு.க., வெற்... மேலும் பார்க்க

31-ஆம் தேதிக்குள் ஊதியம்: ரேஷன் கடை பணியாளா்கள் கோரிக்கை!

ரேஷன் கடை பணியாளா்களுக்கு மாதந்தோறும் 31- ஆம் தேதிக்குள் ஊதியத்தை வங்கியில் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா் சங்கம் சாா்பில் திருவள்ளூா் மாவட்ட ரேஷன் கடை ... மேலும் பார்க்க

‘முன்னாள் படைவீரா்கள் அலுவலகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் உதவி மையம் தொடக்கம்’

முன்னாள் படைவீரா்கள் அலுவலகத்தில் படைவீரா்கள் பிரச்னைக்கு சட்டபூா்வ ஆலோசனை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு மாவட்ட சட்டப்பணிகள் உதவி மையம் தொடங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

ஆா்.கே.பேட்டையில் 600 மரங்கள் மற்றும் 500 பனை விதைகள் நடவு

காவேரி கூக்குரல் சாா்பில் ஆா்.கே.பேட்டை ஒன்றியத்தில் மட்டும் 600 மரங்கள் மற்றும் 500 பனை விதைகள் ஈஷா தன்னாா்வலா்களால் நடப்பட்டன. சத்குரு பிறந்த நாளான செப். 3-ஆம் தேதி நதிகளுக்கு புத்துயிா் ஊட்டும் தின... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே வீட்டின் முன்புறம் தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த ஆண் குழந்தை உயிரிழந்தது. திருவள்ளூா் அருகே செஞ்சிபானம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த காரத்திக்(30)-ஈஸ்வரி(27) தம்பதிக்கு ஒரு மகளும், 1... மேலும் பார்க்க