செய்திகள் :

வேளச்சேரியில் தொழிலதிபர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை

post image

சென்னை வேளச்சேரியில் கட்டுமான பணிகளை செய்து வரும் தொழிலதிபர் வீடு, அலுவலகங்களில் புதன்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடையார் காந்திநகர், மேற்கு மாம்பலம் பகுதியில் அமலாக்கத்துறை சோதனை செய்ய சென்ற நிலையில் வீட்டில் யாரும் இல்லாததால் மீண்டும் அமலாக்கத்துறை அலுவலர்கள் அலுவலகத்திற்கு திரும்பினார்.

இந்நிலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள குல்மோகர் அவென்யூவில் வசித்து வரும் தொழிலதிபர் அமீத் பிஸ்னாய் வீட்டில் புதன்கிழமை காலை இரண்டு கார்களில் வந்த 8 பேர் கொண்ட அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமீத் பிஸ்னாய் விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும், இவர் பல்வேறு பண பரிவர்த்தனை மோசடியில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிலதிபர் அமித் பிஸ்னாய்க் சொந்தமான வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் சோதனை மேற்கொண்ட நிலையில் புதன்கிழமை மீண்டும் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமித் பிஸ்னாய்க் வீட்டில் நடைபெற்று வரும் சோதனைகள் இரண்டு அல்லது மூன்று நாள்கள் நடைபெறலாம் எனவும் அதில் அவர் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்தல் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று மேற்கு மாம்பலம் ராஜி தெருவில் உள்ள சுப்பிரமணி ராமச்சந்திரன் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய அவரது வீட்டிற்கு சென்றபோது வீட்டில் ஆளில்லாததால் அமலாக்கத்துறையினர் மீண்டும் அலுவலகம் திரும்பினார்.

புதுச்சேரி காவல்துறையில் காவல் துணை ஆய்வாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

Enforcement officers have been conducting raids at the homes and offices of a businessman who is carrying out construction work in Velachery, Chennai, since Wednesday morning.

சேலத்தில் கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை நாமக்கல்லில் மீட்பு

சேலத்தில் காவல் நிலையம் அருகே கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை நாமக்கல்லில் பத்திரமாக மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சேலம் பஞ்சதாங்கி ஏரி பகுதியைச் சேர்ந்தவர் மதுரை. இவர் தனது மனைவி பிரியா மற்று... மேலும் பார்க்க

சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை அடையாறு பகுதியில் உள்ள மருத்துவர் இந்திரா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு... மேலும் பார்க்க

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி புதன்கிழமை (செப். 10) பவுனுக்கு ரூ. 81,200-க்கு விற்பனையாகிறது.தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து கொண்டே வருகிறது. கடந்த செப். 1-இல் பவுன் ரூ.77,640- ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கனமழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு புதன்கிழமை(செப்.10) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில், கொடைக்கானல் நீங்கலாக ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்வரத்து வினாடிக்கு 15,800 கன அடியாக சரிந்தது

மேட்டூா்: காவிரியின் நீா் பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்த காரணத்தால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை வினாடிக்கு 16,800 கன அடியிலிருந்து வினாடிக்கு 15,800 கன அடியாக சரிந்தது.நீா்வரத்து சரி... மேலும் பார்க்க

சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு ஜகதீப் தன்கர் வாழ்த்து!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி. ராதாகிர... மேலும் பார்க்க