செய்திகள் :

சென்னை: காதல் ஜோடி தற்கொலை - அதிர்ச்சியில் குடும்பம்!

post image

சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் திரிஷா (20). இவர், அண்ணாநகரில் உள்ள ஜவுளி கடையில் வேலைப்பார்த்து வந்தார். அப்போது அதே ஜவுளி கடையில் வேலை செய்துவந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராபின் (22) என்பவருடன் திரிஷாவுக்கு காதல் மலர்ந்தது. இருவரும் உயிருக்கு உயிராக கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டினருக்கும் தெரியவந்தது. உடனே காதலுக்கு இருவீட்டிலும் பச்சை கொடி காட்டப்பட்டதால் ராபினும் திரிஷாவும் மகிழ்ச்சியடைந்தனர். அதன்பிறகு இருவரும் கணவன் மனைவி போல வாழ தொடங்கினர்.

காதல்
காதல்

இந்தநிலையில்தான் இந்தக் காதல் ஜோடி வேப்பேரி பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியது. சந்தோஷமாக சென்ற இவர்களின் காதல் வாழ்க்கையில் திடீரென புயல் வீச தொடங்கியது. அதனால் வேப்பேரியில் உள்ள தனியார் விடுதியில் ராபினுக்கும் திரிஷாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திரிஷா, திருமணத்துக்கு முன்பே உன் சுயரூபம் எனக்கு தெரிந்து விட்டது. நாம் இருவரும் இனிமேல் சந்தோஷமாக வாழ முடியாது. நமக்குள் ஏற்பட்ட பிரிவை என் குடும்பத்திலும் கூற முடியாது. நான் தவறு செய்துவிட்டேன் என மனவிரக்தியோடு ராபினிடம் பேசியிருக்கிறார். அதோடு இனிமேல் நான் உயிர் வாழ விரும்பவில்லை எனவும் கூறியிருக்கிறார் திரிஷா. அதைக் கேட்ட ராபினும் உன்னை நம்பி நானும் ஏமாந்துவிட்டேன் என்று கூறிவிட்டு விடுதி அறையை வெளிபக்கமாக பூட்டிவிட்டு திருவள்ளூருக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது.

விடுதி அறையில் தனியாக இருந்த திரிஷா, தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. வீட்டுக்குச் சென்ற ராபின், திரிஷாவின் தோழி ஒருவருக்கு போன் செய்து நடந்த விவரங்களைக் கூறியதோடு விடுதிக்குச் சென்று திரிஷாவை பார்க்கும் போது கூறியிருக்கிறார். இதையடுத்து திரிஷாவின் தோழி, விடுதிக்கு வந்து அங்குள்ளவர்களிடம் விவரத்தை தெரிவித்திருக்கிறார். இதையடுத்து திரிஷாவும் ராபினும் தங்கியிருந்த 103 நம்பர் அறைக்குச் சென்ற விடுதி ஊழியர்கள் மாற்று சாவி மூலம் கதவைத் திறந்து பார்த்தனர். அப்போது திரிஷா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

சடலம்

உடனடியாக வேப்பேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் திரிஷாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு திரிஷாவின் மரணம் குறித்தும் போலீஸார் விசாரித்து வருகிறார். விடுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் திரிஷா தற்கொலை செய்து கொண்ட தகவலை கேள்விபட்ட ராபின், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்தத் தகவலைக் கேள்விபட்ட திருவள்ளூர் மாவட்ட போலீஸார், ராபினின் சடலத்தை மீட்டு விசாரித்து வருகிறார்கள். காதலர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர்: 5 பேரின் மண்டையை உடைத்து `இன்ஸ்டா ரீல்ஸ்’ வீடியோ! - ரௌடிகளைச் சுட்டுப் பிடித்த போலீஸ்

``நல்லா அழுவுடா அப்போதான் ரீல்ஸ் கெத்தா இருக்கும்’’கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தில் வேலை செய்து வரும் கார்த்தி, கட்டுமானப் பொருட்களின் பாதுகாப்புக்க... மேலும் பார்க்க

“உன் உயிர் என் கையில்தான்”-பெண் காவலரை மிரட்டிய எஸ்.ஐ; இருவரும் சஸ்பெண்ட்! - நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் போக்குவரத்து பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் செல்வகுமார். அதே பிரிவில் இந்திராகாந்தி என்பவர் காவலராக பணிபுரிந்து வந்தார். இருவரும் நெருங்கிப் பழகி வந... மேலும் பார்க்க

பா.ம.க நிர்வாகி ம.க.ஸ்டாலின் கொலை முயற்சி வழக்கு; போலீஸால் தேடப்பட்ட நபர் தற்கொலை! - என்ன நடந்தது?

கும்பகோணம், ஆடுதுறை அருகே உள்ள மேல மருத்துவக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ம.க.ஸ்டாலின். ஆடுதுறை பேரூராட்சி தலைவராக இருக்கும் இவர், பா.ம.க-வில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர், தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செ... மேலும் பார்க்க

RCB-காக வாழ்க்கையை தொலைத்த இளைஞர்: 2022-ல் நடந்த கொலை- துப்பு துலக்கிய இன்ஸ்பெக்டர் சொல்வது என்ன?

அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்து நண்பன் தர்மராஜிடம் அவதூறாக பேசியிருக்கிறார் விக்னேஷ்.இதனால், விராட் கோலியின் ரசிகரான தர்மராஜுக்கு இது ஆத்திரத்தைக் ... மேலும் பார்க்க

``நவோனியா கும்பலால் சென்னையில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்'' - காவல்துறை எச்சரிக்கை

சட்டை பாக்கெட்டில் மொபைல் போனை வைத்துவிட்டு, பஸ்ஸிற்கு காத்திருப்போம். பஸ் வந்ததும் முண்டி அடித்துகொண்டு ஏறுவதில், நம் உடைமைகளின் மீது அவ்வளவு கவனம் செலுத்தமாட்டோம். பஸ் ஏறியதும் தான், நம் மொபைல் போன்... மேலும் பார்க்க

கூடலூர்: தொடரும் யானை - மனித எதிர்கொள்ளல்கள்; 4 மாதத்தில் 5 பேர் உயிரிழப்பு; கொதிக்கும் மக்கள்

மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் முக்கிய இடத்தில் இருக்கிறது. அதிலும் குறிப்பாக யானை - மனித எதிர்கொள்ளல்களைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இரு... மேலும் பார்க்க