செய்திகள் :

கூடலூர்: தொடரும் யானை - மனித எதிர்கொள்ளல்கள்; 4 மாதத்தில் 5 பேர் உயிரிழப்பு; கொதிக்கும் மக்கள்

post image

மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் முக்கிய இடத்தில் இருக்கிறது. அதிலும் குறிப்பாக யானை - மனித எதிர்கொள்ளல்களைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கிறது.

குடியிருப்புப் பகுதிகளில் நடமாடி வரும் யானைகளை விரட்ட கும்கி யானைகள் முதல் நவீன தெர்மல் டிரோன் கேமிராக்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், எதிர்கொள்ளல்கள் குறைந்தபாடில்லை.

யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

இந்த நிலையில், கூடலூர் அருகில் உள்ள ஓவேலி பகுதியில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் சூப்பர்வைசராகப் பணியாற்றி வந்த ஒருவரை இன்று காலை யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அவருடன் இருந்த மற்றொருவர் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 4 மாதங்களில் 5 பேர் வரை யானை தாக்கியதில் உயிரிழந்த சம்பவங்கள் உள்ளூர் மக்களைக் கொதிப்படையச் செய்திருக்கிறது.

இது குறித்துத் தெரிவித்த கூடலூர் மக்கள், "ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட பெரியார் நகர்ப் பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் மற்றும் அவரின் நண்பர் செல்லதுரை இருவரும் அங்குள்ள தனியார் தேயிலைத் தோட்டத்திற்குப் பணிக்குச் செல்கையில் இருசக்கர வாகனத்தில் செல்கையில் சாலை ஓரத்தில் நின்றிருந்த ஒற்றைக் காட்டு யானை இருவரையும் தாக்கியது.

காயங்களுடன் உயிருக்குப் போராடிய இருவரையும் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். சம்சுதீன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கூடலூர் எம்.எல்.ஏ ( அ.தி.மு.க)
கூடலூர் எம்.எல்.ஏ ( அ.தி.மு.க)

காயமடைந்த செல்லதுரை உயர் சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். கூடலூர் பகுதியில் கடந்த 4 மாதத்தில் 5 பேர் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர். வழித்தடங்களை இழந்து குடியிருப்புப் பகுதிகளில் நடமாடி வரும் யானைகளுக்கு உள்ள பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து ஆய்வு செய்ய வனத்துறை அக்கறை காட்டுவதில்லை.

அதன் காரணமாகவே வனத்துறையைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டு வருகிறோம். உரியத் தீர்வு எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

கடலூர்: 5 பேரின் மண்டையை உடைத்து `இன்ஸ்டா ரீல்ஸ்’ வீடியோ! - ரௌடிகளைச் சுட்டுப் பிடித்த போலீஸ்

``நல்லா அழுவுடா அப்போதான் ரீல்ஸ் கெத்தா இருக்கும்’’கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தில் வேலை செய்து வரும் கார்த்தி, கட்டுமானப் பொருட்களின் பாதுகாப்புக்க... மேலும் பார்க்க

சென்னை: காதல் ஜோடி தற்கொலை - அதிர்ச்சியில் குடும்பம்!

சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் திரிஷா (20). இவர், அண்ணாநகரில் உள்ள ஜவுளி கடையில் வேலைப்பார்த்து வந்தார். அப்போது அதே ஜவுளி கடையில் வேலை செய்துவந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராபின்... மேலும் பார்க்க

“உன் உயிர் என் கையில்தான்”-பெண் காவலரை மிரட்டிய எஸ்.ஐ; இருவரும் சஸ்பெண்ட்! - நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் போக்குவரத்து பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் செல்வகுமார். அதே பிரிவில் இந்திராகாந்தி என்பவர் காவலராக பணிபுரிந்து வந்தார். இருவரும் நெருங்கிப் பழகி வந... மேலும் பார்க்க

பா.ம.க நிர்வாகி ம.க.ஸ்டாலின் கொலை முயற்சி வழக்கு; போலீஸால் தேடப்பட்ட நபர் தற்கொலை! - என்ன நடந்தது?

கும்பகோணம், ஆடுதுறை அருகே உள்ள மேல மருத்துவக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ம.க.ஸ்டாலின். ஆடுதுறை பேரூராட்சி தலைவராக இருக்கும் இவர், பா.ம.க-வில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர், தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செ... மேலும் பார்க்க

RCB-காக வாழ்க்கையை தொலைத்த இளைஞர்: 2022-ல் நடந்த கொலை- துப்பு துலக்கிய இன்ஸ்பெக்டர் சொல்வது என்ன?

அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்து நண்பன் தர்மராஜிடம் அவதூறாக பேசியிருக்கிறார் விக்னேஷ்.இதனால், விராட் கோலியின் ரசிகரான தர்மராஜுக்கு இது ஆத்திரத்தைக் ... மேலும் பார்க்க

``நவோனியா கும்பலால் சென்னையில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்'' - காவல்துறை எச்சரிக்கை

சட்டை பாக்கெட்டில் மொபைல் போனை வைத்துவிட்டு, பஸ்ஸிற்கு காத்திருப்போம். பஸ் வந்ததும் முண்டி அடித்துகொண்டு ஏறுவதில், நம் உடைமைகளின் மீது அவ்வளவு கவனம் செலுத்தமாட்டோம். பஸ் ஏறியதும் தான், நம் மொபைல் போன்... மேலும் பார்க்க