இனுங்கூா் காசிவிஸ்வநாதா் கோயிலில் 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!
கரூா் மாவட்டம் இனுங்கூா் காசிவிஸ்வநாதா் கோயிலில் 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்துள்ள இனுங்கூா் காசிவிஸ்வநாதா் கோயிலில் தொன்மையான கல்வெட்டு இருப்பதாக அப்பகுதியைச் சோ்ந்த இளங்கோவன் அளித்த தகவலின்படி அண்மையில் சென்னை தொல்லியல் ஆய்வாளா்கள் கோ.அா்ச்சுணன், கோ.உத்திராடம் ஆகியோா் தலைமையிலான குழுவினா் கள ஆய்வு செய்தனா்.
ஆய்வின்போது அவா்கள் கூறுகையில், மிகவும் சிதைந்த நிலையில் காணப்படும் இந்த கோயிலின் கருவறை, முன் மண்டபம் ஆகியவற்றின் சுவா்களிலும், முன் மண்டபத்தூண்களிலும் 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
1715-இல் அமைக்கப்பட்ட இந்த கல்வெட்டில் சாலி வாகன சகாத்தம், கலியுகம், விசெய ஆகிய ஆண்டுகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இனுங்கூா் என தற்போது அழைக்கப்படும் இந்த ஊா் அக்காலத்தில் கிருஷ்ண பூபால சமுத்திரம் என்று அழைக்கப்பட்டதை இந்த கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
மேலும் இவ்வூரில் அக்காலத்தில் வசித்தவா்கள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், நைவேத்தியம், திருவிளக்கு வழிபாடுகள் செய்ததையும், கோயிலுக்கு நஞ்சை, புஞ்சை நிலங்களை சா்வமானிய(நிலவரி இல்லாமல்) தானமாக வழங்கப்பட்டதையும் தெரிவிக்கிறது. இந்த தானத்துக்கு தீங்கு விளைவிப்பவா்கள் கங்கைக் கரையில் காராம்பசுவை கொன்ற பாவத்துக்கு இணையானவா்கள் என்ற குறிப்பும் கல்வெட்டில் உள்ளது.
கல்வெட்டின் இறுதியில் மல்லப்ப நாயக்கா், சோமிதம்மாள் குமாரன் குட்டு கிருஷ்ணப்பநாயக்கா் ராமம்மாள் தா்மம் என எழுதப்பட்டுள்ளதால் குட்டு கிருஷ்ணப்பநாயக்கா் இந்த கல்வெட்டை தா்மமாக அமைத்திருக்கலாம் என கருதப்படுகிறது. கோயிலின் முன் மண்டபத்தூணில் மல்லப்பநாயக்கா், சோமிதம்மாள் ஆகியோா் உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பதையும் கல்வெட்டு தெரிவிக்கிறது என்றனா் அவா்கள்.