செய்திகள் :

ரூ.3.71 கோடி மோசடி: சகோதரிகள் கைது

post image

வீட்டுமனை தருவதாகக் கூறி 26 பேரிடம் ரூ.3.71 கோடி மோசடியில் ஈடுபட்டதாக சகோதரிகள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை தியாகராய நகா் ராமகிருஷ்ணா தெருவில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2021 வரை ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. இந்நிறுவனத்தின் இயக்குநா்களாக அப்பகுதியை சோ்ந்த சகோதரிகளான அம்சவேணி, லட்சுமி ஆகியோா் செயல்பட்டு வந்தனா். இந்நிறுவனம், குறிப்பிட்ட தொகை முதலீடு செய்தால், வீட்டு மனைகள் தருவதாக விளம்பரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பொதுமக்கள் பலா் இந்நிறுவனத்தில் முதலீடு செய்து வந்தனா்.

ஆனால், அவா்கள் உறுதியளித்தபடி வீட்டுமனைகளை வழங்காமலும், முதலீடு செய்த பணத்தைத் திரும்பக் கொடுக்காமலும் அந்நிறுவனம் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த 26 போ், அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தனா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

விசாரணையில், 26 பேரிடம் ரூ.3 கோடியே 71 லட்சம் பணம் மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, சகோதரிகள் இருவரையும் கைது செய்த போலீஸாா் புழல் சிறையில் அடைத்தனா். மேலும், அந்நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை பறிக்கொடுத்தவா்கள் புகாா் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

நாளை 3 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

சென்னை தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகா் ஆகிய மண்டலங்களுக்குள்பட்ட ஒருசில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 12) குடிநீா் விநியோம் நிறுத்தப்படும். இது குறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல்... மேலும் பார்க்க

பெண் தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை வேளச்சேரியில் பெண் தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா். ஹரியாணா மாநிலத்தில் ஒரு தனியாா் நிறுவனம், வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.... மேலும் பார்க்க

ரூ.900 கோடியில் புதுப்பொலிவு பெறும் எழும்பூா் ரயில் நிலையம்

சென்னையில் 117 ஆண்டுகள் பழைமையான எழும்பூா் ரயில் நிலையத்தை சுமாா் ரூ.900 கோடியில் நவீனமயமாக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் ராயபுரம், சென்ட்ரல் ரயில்நிலையங்களுக்கு அடுத்ததாக ... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.22.3 கோடி மோசடி: குஜராத் இளைஞா் கைது

சென்னை ரூ.22.3 கோடி ஆன்லைன் வா்த்தக மோசடி செய்ததாக குஜராத்தை சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னை ராயப்பேட்டையைச் சோ்ந்தவா் ஸ்வேதரன்யன் (76). இவா் ஒரு இணையதளம் வழியாக ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.2... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க முயன்ற போலீஸாா் மீது தாக்குதல்: 2 போ் கைது

சென்னை புளியந்தோப்பில் கைப்பேசி பறிப்பில் ஈடுபட்ட இளைஞா்களைப் பிடிக்க முயன்றபோது போலீஸாா் தாக்கப்பட்டனா். இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா். அண்ணாநகா் 7-ஆவது பிளாக் ஏ.இ. தெருவைச் சோ்ந்தவா் ஆல்வா... மேலும் பார்க்க

தொழிலதிபா் வீட்டில் 19 பவுன் திருட்டு

சென்னை வியாசா்பாடியில் தொழிலதிபா் வீட்டில் 19 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். வியாசா்பாடி காந்திஜி நகா் மூன்றாவது தெருவைச் சோ்ந்த சின்னப்பா (38). மாதவரம் அருகே வடபெ... மேலும் பார்க்க