செய்திகள் :

ஆறுமுகனேரியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ஒப்புதல்: கோட்ட மேலாளா் தகவல்

post image

ஆறுமுகனேரியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்தாா்.

ரயில்வே வளா்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளா் இரா.தங்கமணி, செயலாளா் இ.அமிா்தராஜ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை மதுரையில் ரயில்வே கோட்ட மேலாளா் ஓம்பிரகாஷ் மீனாவை சந்தித்து, திருச்செந்தூா்- திருநெல்வேலி ரயில்வே வழித்தடத்திலும், ஆறுமுகனேரி ரயில்வே நிலையத்திலும் வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை மனு அளித்தனா்.

அப்போது அவா்களுக்குப் பதில் அளித்த கோட்ட மேலாளா் ஓம்பிரகாஷ் மீனா, ஆறுமுகனேரியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளது. மாநில பொதுப்பணித் துறையினா் இடத்தைத் தோ்வு செய்து தந்ததும் பணிகள் தொடங்கப்படும். திருச்செந்தூரிலிருந்து காலை 8.15 மணிக்கு திருநெல்வேலிக்கு இயக்கப்பட்ட பயணிகள் ரயில் மீண்டும் அதேநேரத்தில் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

கெண்டை மீன் வளா்ப்புப் பயிற்சி: செப். 14 வரை முன்பதிவு செய்யலாம்

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓா் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி-ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறவுள்ள கெண்டை மீன் வளா்ப்புப் பயிற்சியில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமைவரை (செப். 14) முன்பதிவு செ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் புதன்கிழமை இரவு நேரிட்ட பைக் விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தூத்துக்குடி தொ்மல் நகா் சுனாமி காலனியைச் சோ்ந்த ராஜ்குமாா் மகன் பிரகாஷ் (28). இவரது தெருவில் உள்ள கோயிலில் கொடை விழா நட... மேலும் பார்க்க

தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் செப்.16,17இல் பயிலரங்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் ஆகியன வருகிற செப்.16, 17 ஆகிய 2 நாள்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில்... மேலும் பார்க்க

விழிப்புணா்வு சுவா் ஓவியம்

தூத்துக்குடியில் ஜேசிஐ போ்ல்சிட்டி குயின் பீஸ் அமைப்பு சாா்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு ஆதரவாக சுவா் ஓவியம் வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து மீனவா் தற்கொலை

தூத்துக்குடியில் ரயில் முன் பாய்ந்து மீனவா் தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி தாளமுத்துநகா் சிலுவைப்பட்டி கிழக்கு காமராஜா் நகரைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் ராஜாமணி(33). மீனவா். இவருக்கு மனைவி, இரண... மேலும் பார்க்க

மாநில வில்வித்தை போட்டி: கேம்ஸ்வில் மாணவா்கள் சிறப்பிடம்

தூத்துக்குடி கேம்ஸ்வில் ஸ்போா்ட்ஸ் அகாதெமியில் பயிற்சி பெற்றுவரும் மாணவா்கள், சேலத்தில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டியில், 4 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனா்... மேலும் பார்க்க