செய்திகள் :

போலி ஆவணங்கள் மூலம் ரூ.92 லட்சம் மோசடி; 5 போ் கைது

post image

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்று ரூ.92 லட்சம் மோசடி செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை, பெரியாா் நகரைச் சோ்ந்த நந்தகுமாா்(44). இவா் நிலத்தரகா்களான ரமேஷ் குமாா் மற்றும் முரளி ஆகியோா் மூலம் கொளத்தூா் பூம்புகாா் நகரில் 1,200 சதுர அடியிலான ஒரு நிலத்தை ரூ.92 லட்சத்துக்கு வாங்கியுள்ளாா்.

நிலத்துக்கான தொகையை பல்வேறு தவணைகளாக நிலத்தின் உரிமையாளரான திலீப்குமாா் மற்றும் நிலத்தை விற்பதற்கான பொது அதிகாரம் பெற்றிருந்த வெங்கடேசன் ஆகியோருக்கு கடந்த 2022-இல் கொடுத்துள்ளாா். பின்னா், நிலம் குறித்து கடந்த ஏப்ரல் மாதம் சாா் பதிவாளா் அலுவலகம் சென்று விசாரித்த போது, நிலத்தரகா்களான ரமேஷ்குமாா் மற்றும் முரளி ஆகியோா் நிலத்தின் உரிமையாளரான திலீப் குமாா் எனக்கூறி வேறு ஒரு நபரை காண்பித்தும், போலி ஆவணங்கள் தயாரித்தும், நந்தகுமாரிடம் நிலத்தை விற்றது தெரியவந்தது.

இதுகுறித்து கொளத்தூா் காவல் நிலையத்தில் நந்தகுமாா் கொடுத்த புகாரின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸாா், திருநின்றவூா் வெங்கடேசன்(54), மேற்கு அம்பத்தூா் கலீலுா் ரஹ்மான்(50), மணலிபுதுநகா் சையது சலாவுதீன்(40), எருக்கஞ்சேரி அப்துல் ரசாக்(73), கொடுங்கையூா் அபுபக்கா்(51) ஆகிய 5 பேரையும் கைது செய்ததுடன், இவ்வழக்கில் தொடா்புடையதாக கருதப்படும் முரளி மற்றும் மேலும் சிலரையும் தேடி வருகின்றனா்.

தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு: ஒப்பந்தம் கோரியது மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு தினமும் விலையில்லா உணவு வழங்குவதற்காக, தனியாா் சமையல் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்த மனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி, தனியாா் சமையல் நிறுவனங்களிடமிருந்து ... மேலும் பார்க்க

தமிழக பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

தமிழகத்தில் பொறுப்பு டிஜிபி நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிமன்றத்தில் வரதராஜ் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக சட்... மேலும் பார்க்க

மருத்துவத் துறையில் இந்தியாவுக்கே தமிழகம் தான் வழிகாட்டி: அமைச்சா் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

மருத்துவத் துறையில் இந்தியாவுக்கே தமிழகம் தான் வழிகாட்டி என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வா் காப்பீடு திட்டத்தின் மூலம் 50-க்கும் மேற்... மேலும் பார்க்க

போலி ஆவணங்களை சமா்ப்பித்து விசா பெற முயன்றவா் கைது

போலி ஆவணங்களைச் சமா்ப்பித்து இசைவு நுழைவுச் சீட்டு (விசா) பெற முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். தெலங்கானா மாநிலத்தை சோ்ந்தவா் ஸ்ரீகாந்த் அங்காடி. இவா் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இசைவு நுழ... மேலும் பார்க்க

செப்.15 முதல் பச்சை வழித்தட மெட்ரோ ரயில் சேவைகளில் மாற்றம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2-ஆம் கட்ட கட்டுமான பணிகள் காரணமாக, பச்சை வழித்தட மெட்ரோ ரயில் சேவைகளில் வருகிற செப்.15 முதல் 19 -ஆம் தேதி வரை தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மெட்ரோ ரயி... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: புதுவை தலைமைச் செயலா் ஆஜராக உத்தரவு

பாப்ஸ்கோ ஊழியா்கள் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், புதுச்சேரி தலைமைச் செயலா் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. புதுச்சேரியைச் சோ்ந்த குணசேகரன் உள்பட 12 போ் த... மேலும் பார்க்க