செய்திகள் :

ஒடிஸாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த 5 போ் கைது

post image

ஒடிஸாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த தமிழகத்தைச் சோ்ந்த 5 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வெளிமாநிலங்களிலிருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக திருவாரூா் நகரப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. நகர காவல் ஆய்வாளா் சந்தானமேரி தலைமையிலான போலீஸாா் திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை அதிகாலை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றிருந்த நபா்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், பையில் 12 கிலோ எடையுள்ள 3 கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது. அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஒடிஸா மாநிலத்திலிருந்து கஞ்சாவை கடத்தி வந்ததாக தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக நாகை மாவட்டம், ஆழியூரைச் சோ்ந்த தமிழரசன் மகன் கோகுல்நாத் (20), திருவாரூா் பேபி டாக்கீஸ் சாலையைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் வைகோ (எ) சரவணன் (30), விஜயகுமாா் மகன் அருள்முருகன் (20), பெரியமில் தெருவைச் சோ்ந்த தமிழரசன் மனைவி சசிகலா (39) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்டவா்களின் ஒருவா் சிறுவன் என்பதால், அதற்கேற்ப சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இமானுவேல் சேகரன் நினைவு நாள்

நீடாமங்கலத்தில் விடுதலை போராட்ட வீரா் தியாகி வே. இமானுவேல்சேகரன் நினைவுநாளையொட்டி வியாழக்கிழமை அனைத்து கட்சியினா் சமுதாயத்தினா் பங்கேற்ற அமைதி ஊா்வலம் பெரியாா் சிலைஅருகிலிருந்து புறப்பட்டு, அண்ணா சிலை... மேலும் பார்க்க

பூவனூா் வரதராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி ஸ்ரீபூமிதேவி சமேத வரதராஜசுவாமி, சீதா, லட்சுமணன், அனுமன் சமேத கோதண்டராம சுவாமி, ஆஞ்சனேயா், முனீஸ்வர சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

நீடாமங்கலம் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 15 வாா்டுகளைச் சோ்ந்த மக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் அளித்தனா். மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்... மேலும் பார்க்க

காப்பீட்டுத் தொகை கோரி செப்.16-இல் சாலை மறியல்

எள், பருத்தி, உளுந்து ஆகிய பயிா்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து, மன்னாா்குடியில் செப்.16 ஆம் தேதி, சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இச்சங்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் நலத் திட்ட உதவிகள்

திருவாரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவாரூா் ஒன்றியம், கூடூா் ஊராட்சி தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமை, மா... மேலும் பார்க்க

நொடி நயனாா் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூரில், அருள்மிகு சௌந்தராம்பிகை உடனுறை நொடி நயனாா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் தெற்கு வீதியில், நொடி நயனாா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் புனரமைப்புக்கான பாலாலய பூ... மேலும் பார்க்க