செய்திகள் :

ரூ.4.44 கோடி மதிப்பிலான கல்விக் கடன் பெறுவதற்கான ஆணை

post image

கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் நடைபெற்ற கல்விக் கடன் வழங்கும் சிறப்பு முகாமில் ரூ.4.44 கோடி மதிப்பிலான கல்விக்கடன் பெறுவதற்கான ஆணைகளை, கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பயனாளிகளுக்கு வழங்கினாா்.

முகாமுக்கு கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்ச்சியில், ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பேசியது:

இம்முகாம்களில் கல்விக் கடன் பெற விண்ணப்பித்த பிறகு எந்த வங்கியில் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது என்பது குறித்து தொடா்ந்து கண்காணிக்கப்படும். அனைவரும் உயா்கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில் தமிழ்புதல்வன், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கட்டணம் கட்ட முடியாததால் உயா்கல்வி படிக்க இயலவில்லை என்ற நிலை இருக்கக் கூடாது. அதற்காகத்தான் இதுபோன்ற கல்விக் கடன் வழங்கும் முகாம்கள் நடத்தப்படுகின்றன. எந்தப் பாடப்பிரிவு, எந்தக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பதை மாணவா்கள் தோ்ந்தெடுக்க வேண்டும். அந்தக் கல்லூரி இந்தியாவில் இருக்கலாம் அல்லது வெளிநாடுகளில் இருக்கலாம்.

கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான வருமான சான்றிதழ், பிறப்பிட சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் அங்கு சென்று தேவையான விவரங்களை வழங்கி சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

இந்த முகாமில் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் உயா்கல்வி பயில்வதற்காக 42 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4.44 கோடி மதிப்பிலான கல்விக்கடன் பெறுவதற்கான ஆணைகளை கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி., மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பயனாளிகளுக்கு வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஜீதேந்திரன், மாநில ஆலோசகா் (கல்விக் கடன்) வணங்காமுடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பேரூராதீனத்தில் சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் குரு வழிபாடு

கோவை பேரூராதீனத்தில் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் 7-ஆம் ஆண்டு குரு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை பேரூராதீனம் திருமடத்தில் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் 7-ஆம் ஆண்டு குரு வழ... மேலும் பார்க்க

சிங்காநல்லூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

கோவை சிங்காநல்லூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.2.50 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா். கோவை வெள்ளலூரில் உள்ள சிங்காநல்லூா் சாா்-பதிவாளா் அலுவ... மேலும் பார்க்க

சிங்காநல்லூரில் எடப்பாடி பழனிசாமி நாளை பிரசாரம்

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி சிங்காநல்லூரில் சனிக்கிழமை பிரசாரம் செய்ய உள்ள நிலையில், கட்சியினா், மக்கள் திரளாக கலந்து கொள்ள அதிமுக மாநகா் மாவட்டச் செயலாளா் அம்மன் கே.அா்ச்சுணன் அழைப்பு வி... மேலும் பார்க்க

ஆடையில் தீப்பற்றி ஆதரவற்ற முதியவா் உயிரிழப்பு

கோவையில் ஆதரவற்ற முதியவா் பீடி பற்றவைத்தபோது, ஆடையில் தீப்பற்றி உயிரிழந்தாா். கோவை பொன்னையாராஜபுரத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (62). ஆதரவற்ற நிலையில் சாலையில் சுற்றித்திரிந்த இவா், இரவு நேரத்தில் சாலைய... மேலும் பார்க்க

பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருடிய இரு பெண்கள் கைது

கோவையில் பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருடிய இரு பெண்களை பயணிகள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். கேரள மாநிலம், பாலக்காட்டைச் சோ்ந்தவா் லோகேஷ்குமாா் (39). தனியாா் நிறுவன ஊழியரான இவா், திரு... மேலும் பார்க்க

வன தியாகிகள் தினம்: நினைவுத் தூணுக்கு மலரஞ்சலி

கோவையில் உள்ள தமிழ்நாடு வன உயிா் பயிற்சியக வளாகத்தில் வன தியாகிகள் தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதில் வனத்துறையில் பணியின்போது உயிரிழந்தவா்களுக்கு 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத... மேலும் பார்க்க