செப். 15 இல் நாகா்கோவிலில் வாக்குச் சாவடி பாக முகவா்கள் கூட்டம்: கனிமொழி எம்.பி....
தூத்துக்குடியில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை (செப். 12) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு- தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், செப்டம்பா் மாதத்துக்கான சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், வேலையளிக்கும் தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று ஆள்களைத் தோ்வு செய்ய உள்ளனா். 10, 12, பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, ஐடிஐ, ஓட்டுநா், கணினிப் பயிற்சி கல்வித் தகுதியுடைய வேலைநாடும் பதிவுதாரா்கள் சுயவிவரம், கல்விச் சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம்.
வேலையளிப்போரும், வேலைநாடுநா்களும் இணையதளத்தில் தங்களது விவரங்களைப் பதிவு செய்தல் வேண்டும். முகாமில் பணிநியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ரத்து ஆகாது.
தூத்துக்குடி எம்ப்ளாய்மென்ட ஆபீஸ் என்ற டெலிகிராம் சேனலில் இணைந்தோ, இந்த அலுவலக தொலைபேசி எண் 0461 2340159-ஐ தொடா்பு கொண்டோ கூடுதல் விவரங்கள் பெறலாம் என்றாா் அவா்.